பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 18, 19283

7. ‘ணனஃகான் முன்னர்’                                     - தொ. எ. 26

‘லளஃகான் முன்னர்’                                         - தொ. எ. 24

என்புழித் தொடர்பினுள் - (செய்யுளில்) ‘அ’ சாரியையும் கான் சாரியையும் வந்தன.

ஓர் எழுத்திற்கு ஒரு சாரியையும், ஓரெழுத்திற்கு இணைந்து இரு சாரியையும், இணை ஈரெழுத்திற்கு ஒரு சாரியையும் வருதல் பற்றிக் ‘கலந்து’ என்றாம்.

தொடர்மொழியின் புணர்நிலை வகை

105தகுதி அவாய்நிலை அண்மைநிலை மூன்றும்
புணரப் புணர்வது புணர்ப்பெனப் புகல்வர்.

தகுதி - சோற்றை உண்டான் என்புழிச் சோறு என்னும் பதம் உருபு வருமொழிகளோடு புணர்தற்கு முன்பே தானே தனித்து ஓர் ஆதாரம் இன்றியே நிற்பினும், இறிஞி, மிறிஞி போலப் பொருள்அற்ற சொல்அன்றாய், பொருளும் வினைமுதல் - கருவி முதலிய பொருள் அன்றாய், இன்னும் பல குணங்களோடு கூடி நிற்றல்.

[வி-ரை: தகுதி - சோறு என்பது உண்ணப்படுவது என்னும் பொருளதாய்த் தன்பொருள் முடிதற்கேற்ற வினைக்குச் செயப்படுபொருளாய் வருவது முதலிய தகுதியோடு இருக்கும் என்பது.]

அவாய்நிலை - சோறு என்னும் அத்தனிப்பதம் தனக்கு உரிய ஐ - உருபையே விரும்புதலும் அன்றி, ஒரு வினைச் சொல்லினையும் விரும்புதல் முதலாகிய அவாவோடு கூடி நிற்றல்.

[வி-ரை: ஒருசொல் தன்பொருள் நிரம்புதற்கு வேறொரு சொல்லையோ, சொற்களையோ அவாவி நிற்பது அவாய்நிலை]