பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 28295

சொல் விகாரம்

114இந்நான்கு இயல்பும் இயம்புவர் மொழிக்கும்.

என்பது ஒரு காரணமும் இன்றியே தோன்றல் முதலிய நான்கும் பெறும் சொற்கள் என்றவாறு.

எ-டு:

சாத்தன் பசித்து உண்டான் - தோன்றல்.[பசித்து]

குருவி - குரீஇ - திரிதல்.

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் - பெயர், வினை, இடை, உரி - கெடுதல்.

நுனிக்கொம்பர், கடைக்கண், அடிநா, இடைநா, கடைநா, அரைக்காசு, முன்மாலை, பின்மாலை, வந்தான் உழுது, செய்தான் மாடம், இருந்தான் குன்றம் - இவை நிலைமாறுதல்.
என நான்கும் முறையே காண்க.

(கொம்பர்நுனி - நுனிக்கொம்பர். ஏனையவும் அங்ஙனமே கொள்க)

இனிச் சொற்கள் இங்ஙனம் தமிழ்மொழி விதியால் நிலை மாறுதலுமன்றி வடமொழி விதியால் நிலைமாறுதலும் உள.

எ-டு:

‘செய்த வேள்வியர் (வேள்வி செய்தவர்)

‘எய்திய செல்வத்தர்’ (செல்வம் எய்தியவர்)                      - நாலடி. 350

‘கழிந்த உண்டியர்’ [உண்டி கழிந்தவர்]                           - முருகு. 132

‘வேண்டா உயிரார்’ [உயிர் வேண்டார்]                              - கு. 777

‘அருங்கேடன்’ [கேடரியன்]                                        - கு. 210

‘கொண்ட கூழ்த்தாகி’ [கூழ் கொண்டதாகி]                           - கு. 745

‘கூப்பிய கையினர்’ [கை கூப்பினர்]                              - முருகு. 187

வெறுத்த ஆசையர் [ஆசையை வெறுத்தவர்]