உழுவார் உலகத்தார்க்கு ஆணி - உழுவிப்பார் எனவும் அநுபபத்தி தோன்றிய இடத்து இவ்வாறு பொருள் படுவதனை அந்தர்பாவித ணிச் என்பர். ‘உப்பகாரம் ஒன்றென மொழிப’ தொ.எ.76 என்பதற்குக் காட்டிய தபு என்பதும் அது.’ என்று குறிப்பிட்டுள்ளதும் காண்க.] நடத்துவிப்பி, நடப்பிப்பி - இருவகை வினையீற்றின் வி - பி இணைந்தன. நடத்துவித்தான், விடுவித்தான் - இருவகை வினையீற்றின் வி - வேறு வந்தன. ஊட்டுப்பித்தான், உண்பித்தான் - இருவகை வினையினும் பி - வேறு வந்தன. வி - பி இணைதற்குப் பொருள், வி - ஆவது பி - ஆவது கூடியாவது இணைந்து நிற்றலே கருத்து என்க. [வி-ரை: இரு வகைவினை - செய்வி என்வினை, செய் எனவினை.] 7 செய்வி - செய்வினை ஆதல் 72 | செய்விஎன் வினையுள் செய் வினைசிலவே.
|
எ-டு: ‘நிரை ஆமாச் சேர்க்கும் நெடுங்குன்ற நாட’ ‘நட்பாடல் தேற்றா தவர்’ கு - 187 ‘தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்’ - நாலடி 75 - இவற்றுள், சேரும் நெடுங்குன்றம், நட்பாடல் தேறாதவர், தேறா ஒழுக்கம் என்றே பொருள் கொள்வர். |