பக்கம் எண் :

236இலக்கணக் கொத்து 

12வினையெச்சம் ஒன்றையே வெவ்வேறு என்றல்

செய்து செய்பு முதலாயின வெவ்வேறு ஆதலால், இவை எல்லாவற்றையும் கூட்டி, வினையெச்சம் என்று ஒரு பெயரிடல் பொருந்தாது: அன்றியும் வினையைக் கொள்ளும் எட்டு உருபுகளையும், உவம உருபுகளையும், பிறவற்றையும் வினையெச்சம் என்று பெயரிட்டு வழங்காமை காண்க என்பர். பெயரெச்சத்திற்கும் இஃது ஒக்கும்.

13வினையெச்சம் ஈறுசொல் பற்றி இரண்டு

செய்து செய்பு முதலாக ஈறுபற்றி வருவன எல்லாவற்றையும் ஒன்றாக்கி, வான் - பான் - பாக்கு - பின் - முன் - கால் - கடை - வழி - இடத்து முதலாகச் சொல் பற்றி வருவன எல்லாவற்றையும் ஒன்றாக்கி, வினையெச்சம் என்பது இரண்டே என்பர்.

[வி-ரை:

‘செய்து செய்பு செய்யாச் செய்யூச்
செய்தெனச் செயச்செயின் செய்யிய செய்யியர்
வான்பான் பாக்குஇன வினையெச் சம்பிற
ஐந்துஒன்று ஆறுமுக் காலமும் முறைதரும்.’                          - ந. 343

‘செய்து செய்யூ செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செய செயற்குஎன
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.’                  - தொல்.சொ. 230

‘பின்முன் கால்கடை வழியிடத்து என்னும்
அன்ன மரபின் காலம் கண்ணிய
என்ன கிளவியும் குறிப்பே காலம்’                        - தொல். சொ. 231

என்ற நூற்பாக்களை நோக்குக.]

இன்னும் பலபல இலக்கண மாகச்
சொன்னார் சிலரே; துணியார் பலரே.