பக்கம் எண் :

190இலக்கணக் கொத்து 

5தொடர்வினை, விதிவினை மறைவினை
இவை இருவினைப் பொது ஆகும்

உண்பான் - விதிவினை;

உண்ணான் - மறைவினை;

செய்யாய், செய்யீர்,

‘மகன் எனல்’ ‘மக்கட்பதடி எனல்’ (கு. 196)

அல்லும் பகலும் அருச்சிக்க யாமந்தொறும் வல்லார்

வல்லார் மாட்டாதார்;

வல்லார் திறைகொள்வர்;

வல்லார் திறைகொடுப்பர்;

அகல் விசும்பிலார்;

அருளான், வெகுளான்;

-இவை சொல் ஒன்றே விதியினையும் மறைவினையும் ஆயின.

[வி-ரை: செய்யாய் - செய், செய்யாதே என இரு பொருளது.

எனல் - என்று சொல்லுக, என்று சொல்லாதே என இரு பொருளது.

வல்லார் - ஆற்றலுடையவர், ஆற்றலில்லவர் என இரு பொருளது.

விசும்பிலார் - விசும்பை இருப்பிடமாக உடையவர், விசும்பில் இல்லாதவர் என இருபொருளது.

அருளான் - அருள் உடையான், அருள் இல்லாதவன் என இருபொருளது.

வெகுளான் - கோபிப்பான், கோபியான் என இரு பொருளது.