| ஒழிபியல் - நூற்பா எண். 31 | 317 |
இவை பெயரினும் சேறல் ‘கிளை எண் குழூஉ’ ந. 276 முதலிய நூற்பாக்களில் காண்க. பகுதி இடைநிலைகள் முற்று ஒன்றற்கே சிறப்பித்துக் கூறியது: ‘நடவா மடிசீ’ - ந. 137 ‘செய் என் வினைவழி’ - ந. 138 ‘தறட ஒற்று இன்னே’ - ந. 142 ‘ஆநின்று கின்று கிறு' - ந. 143 ‘ப-வ-மூவிடத்து’ - ந. 144 ‘றவ்வொடு உகர உம்மை’ - ந. 145 என்பன. பெயரியலுள் வேண்டும் விகுதிகளையும் வினையியலுள் வேண்டும் விகுதிகளையும் வேறாக எடுத்து ஓதியது: ‘கள் என் ஈற்றின் ஏற்பவும்’ - ந. 278 ‘கள்இறு மொழியும்’ - ந. 280 முதலியனவும் ‘செய்த செய்கின்ற செய்யும்’ - ந 340 ‘செய்யுளுள் உம் உந்து ஆகலும்’ - ந. 341 முதலியனவும் ஆம். நால்வகை விகுதிகள் - உயிர், மெய், உயிர்மெய், சொல் என நால்வகைப்படும் விகுதிகள்] இனி, பொருந்தும் விகுதிகள் பொருந்தல் என்றது என் எனின், குழையன் - இகரம் பெறாது; செட்டி - அன் பெறாது; |