பக்கம் எண் :

 வேற்றுமையில் - நூற்பா எண். 16, 17, 18147

எ-டு:

அரசன் தேர் செய்தான் - ஏவுதல்வினை.

தச்சன் தேர் செய்தான் - இயற்றுதல்வினை.

சாத்தன் உறங்கினான் - இவையின் வேறாயவினை - எனவரும்.

[வி-ரை: உறங்குதல் என்ற வினை ஒருவன் மற்றவனை ஏவுதலாலோ, ஒருவன் தானே முயன்று இயற்றுவதாலோ நிகழாமல் இயற்கையாக நிகழுமொருவினையாதலின் அஃது ஏவுதல் இயற்றுதல் என்ற இரண்டின் வேறாயிற்று.]

வினைமுதற்குப் புறநடை

29வினைமுதல் இன்னும் விரிக்கின் பெருகும்.

[வி-ரை: சுருக்கமாக நூற் இயற்றப்புக்க ஆசிரியர் பெரிதும் விரித்தலை விரும்பாமையானும், வினைமுதல் பற்றிய செய்தி இவ்வளவிற்றே என்று அறுதியிட்டுக்கொள்வார் திரிபுணர்வை அகற்றவேண்டுவது இன்றியமையாதது ஆதலானும் இந்நூற்பாவை வேண்டாகூறி வேண்டியது முடித்தார். இனிவரும் வேற்றுமைப் புறநடை நூற்பாக்களும் அன்ன. 17

விளி வேற்றுமை

30அழைத்தல் என்றுஒன்று அன்றிவேறு இன்மையின்
விளிக்குச் சூத்திரம் விளம்பிலம் என்க.

[வி-ரை: விளிவேற்றுமை படர்க்கையோரை முன்னிலைப்படுத்தி அழைத்தல் என்ற ஒரே பொருளை உடையது ஆதலின், அதுபற்றி ஆசிரியர் எதனையும் விளக்கவில்லை.

வடநூலார் ஒருமைவிளியைச் சம்போதனம் என்றும் பன்மை விளியைச் சம்புத்தி என்றும் கூறுவர். தமிழில் அத்தகைய குறியீடு இன்மையின் அப்பாகுபாட்டினை இவ்வாசிரியர் குறிப்பிடவில்லை] 18