பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 35343

பேராசிரியர் குறிப்பிடுவார். தொல்காப்பியனார் தம் நூலின் இறுதி நூற்பாவில் உத்திவகை முப்பத்திரண்டும் உத்தி இனம் முப்பத்திரண்டும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படை குறிப்பு என்பன - ‘ஒன்றொழி பொதுச்சொல்’ என்பதனால் பெறப்படும். - ந. 269

அன்மொழி - ‘பண்புதொகை வரூஉம் கிளவி யானும்’ என்பதனால் கொள்ளப்படும். - தொ. சொ. 418

ஒட்டு - ‘கருதிய பொருள்தொகுத்து’                               -தண்டி 51

என்பதனால் கொள்ளப்படும்.

ஆகுபெயர் - ‘முதலிற் கூறும்’                               - தொ. சொ. 114

‘அவைதாம், தத்தம் பொருள்வயின்’ ‘அளவும் நிறையும்’

‘கிளந்த அல்ல’                                   - தொ. சொ. 115, 116, 117

பொருள்முதல் ஆறோடு’                                          - ந. 290

என்பனவற்றால் கொள்ளப்படும்.

உவமை - ‘வினைபயன் மெய் உரு'                          - தொ. பொ. 276

முதலிய நூற்பாக்களால் கொள்ளப்படும்.

இறைச்சி ‘உடனுறை உவமம்’                               - தொ. பொ. 420

‘இறைச்சிதானே, ‘அன்புறு தகுந’ இறைச்சியிற் பிறக்கும்’  -தொ. பொ. 229, 30, 31

என்ற நூற்பாக்களால் கொள்ளப்படும்.

உபசாரம் - ஒன்றனை மற்றொன்கறாக் கூறும் மரபு.

ஆசை - விருப்பினால் மிகுத்தும் குறைத்தும் திரியக்கோடல்.

ஞாபகம் . கூறாததனை அறிவுறுத்தல்.