| ஒழிபியல் - நூற்பா எண். 43,45 | 345 |
நித்தியம் - நாடோறும் செய்வது. நைமித்திகம் - நாடோறும் செய்வதன்கண் நிகழும் குறைவு தீரச் சிறப்பகச் செய்வது. காமியம் - ஒரு பயன் கருதி செய்வது. முன்னம் - அகச்செய்யுள் உறுப்புப் பன்னிரண்டனுள் ஒன்றாகிய குறிப்பு. இச்சூத்திரத்துக்குப் பின்புள்ள எழுவகைப் பொருள்கோள் ‘உயர்திணை இயற்பெயர்’ (130) என்னும் நூற்பாவினுள் கூறப்பட்ட ஏழும்.] 43 பிரிவு ஏழு 130 | உயர்திணை இயற்பெயர் அஃறிணை இயற்பெயர் உயர்திணைப் பொருளில் சாதி ஒற்றுமை அஃறிணைப் பொருளில் சாதி ஒருமை உயர்திணைப் பொருளில் சாதிப் பன்மை அஃறிணைப் பொருளில் சாதிப் பண்மை ஒரு சொல் நின்றே தனித்தனி உதவுதல் எனப்பிரிவு ஏழ் என்று இயம்புவர் புலவர்.
| |
எ-டு: இறை என்னும் உயர்திணை இயற்பெயர் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய்நின்று, வருமொழி வந்தபின்பு இறைவன் வந்தான், இறைவர் வந்தார் என நிற்கும். கோ, வேந்து, அரசு, அமைச்சு, கவி, பெண்டு, வேசை, உமை தையல், பேதை - [பெதும்பை முதலாயினவும் அது] இவை கோன் கோக்கள், வேந்தன் வேந்தர், அரசன் அரசர். அமைச்சன் அமைச்சர், கவிஞன் கவிஞர், பெண்டாட்டி |