பக்கம் எண் :


அப்பூதியடிக ணாயனார் புராணம்1001

 

1815.

 அவ்வுரை கேட்ட போதே யங்கண ரருளா, லன்பர்
 செவ்விய திருவுள் ளத்தோர் தடுமாற்றஞ் சேர, நோக்கி
"யிவ்வுரை பொறாதென் னுள்ள; மென்செய்தா னிதற் கொன்"றுண்டால்
"மெய்விரித் துரையு"மென்ன விளம்புவார் விதிர்ப்புற் றஞ்சி,

33

1816.

"பெரியவ ரமுது செய்யும் பேறிது பிழைக்க வென்னோ
 வருவ?"தென் னுரையா ரேனு, மாதவர் வினவ வாய்மை
 தெரிவுற வுரைக்க வேண்டுஞ் சீலத்தாற், சிந்தை நொந்து
 பரிவொடு வணங்கி, மைந்தற் குற்றது பகர்ந்தா ரன்றே;

34

1817.

நாவினுக் கரசர் கேளா "நன்றுநீர் புரிந்த வண்ணம்!;
யாவரித் தன்மை செய்தார்?" என்றுமுன் னெழுந்து சென்றே,
யாவிதீர் சவத்தை நோக்கி யண்ணலா ரருளும் வண்ணம்
பாவிசைப் பதிகம் பாடிப் பணிவிடம் பாற்று வித்தார்,

35

1818.

தீவிட நீங்க வுய்ந்த திருமறை யவர்தஞ் சேயும்,
மேலிய வுறக்க நீங்கி விரைந்தெழு வானைப் போன்று,
சேவுகைத் தவராட் கொண்ட திருநாவுக் கரசர் செய்ய
பூவடி வணங்கக் கண்டு புனிதநீ றளித்தா ரன்றே!

36

1815. (இ-ள்.) அவ்வுரை...நோக்கி - அந்த உரையினைக் கேட்டவுடனே, அன்பரது செம்மையுடைய திருவுள்ளத்தின் கண்ணே ஓர் தடுமாற்றம் சேர, அதனை நோக்கி, இவ்வுரை...அஞ்சி - "இந்த உரையினை என் உள்ளம் பொறுக்கலாற்றாது; அவன் என்ன செய்தனன்; இதற்கெல்லாம் உள்ளுறை "ஒன்று" திண்ணமாக உண்டு; மெய்யினை விரித்துக் கூறுவீராக!" என்று அரசுகள் கூறுதலும் உடல் நடுங்கிப் பயந்து,

33

1816. (இ-ள்.) பெரியவர்...உரையாரேனும் - "பெரியவராகிய திருநாவுக்கரசர் திருஅமுது செய்தருளும் இப்பெறும்பேறு கிடையாமற் பிழைக்கும்படி இவ்வாறு வருவதும் என்னே?" என்று உட்கொண்டு உரையாமல் இருப்பாராயினும்; மாதவர்.....சீலத்தால் - பெருந்தவராகிய அவர் வினவும்போது வாய்மையை உள்ளவாறு தெரியும்படியாகச் சொல்லிவிட வேண்டும் என்ற செம்மை ஒழுக்க நிலையினாலே; சிந்தை நொந்து - மனம் உடைந்து வருந்தி; பரிவொடு வணங்கி - துயரத்தோடும் வணங்கி; மைந்தற்கு உற்றது பகர்ந்தார் அன்றே - மகனுக்கு நேரிட்டதனை உள்ளபடி அப்பொழுதே உரைத்தனராம்;

34

1817. (இ-ள்.) நாவினுக்கரசர் கேளா - திருநாவுக்கரசர் அதனைக் கேட்டு; நன்று நீர்...சென்றே - "நீர் மொழிந்த வண்ணம் நன்று! இத்தன்மை செய்தவர் இவ்வுலகில் யாவர் உள்ளார்?" என்று கூறி, முன்னாக எழுந்து சென்றே; ஆவிதீர் சவத்தை நோக்கி - உயிர் போயின அந்தப் பிள்ளையின் சவத்தினை நோக்கி; அண்ணலார்.....பாற்றுவித்தார் - பெருமையுடையாராகிய சிவபெருமான் அருள் செய்யும்படி பாவின் இசையுடைய திருப்பதிகத்தினைப் பாடிப் பாம்பின் விடத்தைப் போக்கியருளினார்;

35

1818. (இ-ள்.) தீ விடம்....சேயும் - தீப்போன்ற விடம் இவ்வாறு நீக்கப் பெற்று உய்தி யடைந்த திருமறையவராகிய அப்பூதியாருடைய புதல்வனும்; மேவிய...போன்று - பொருந்திய தூக்கத்தினின்றும் நீங்கி விரைவாக எழுவானைப்