பக்கம் எண் :


238திருத்தொண்டர் புராணம்

 

கூடிய பணிகள் செய்து கும்பிடுந் தொழில ராகிப்
பாடிய புனித வாக்கின் பணிகளும் பயிலச் செய்வார்.

170

1436.

அருட்பெரு மகிழ்ச்சி பொங்க "வன்னம்பா லிக்கு" மென்னுந்
திருக்குறுந் தொகைகள் பாடித், திருவுழ வாரங் கொண்டு
பெருத்தெழு காத லோடும் பெருந்திருத் தொண்டு செய்து
விறுப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்ட லாட,

171

1437.

மேவிய பணிகள் செய்து விளங்குநாள், வேட்க ளத்துச்
சேவுயர் கொடியார் தம்மைச் சென்றுமுன் வணங்கிப் பாடிக்,
காவியங் கண்டர் மன்னுந் திருக்கழிப் பாலை தன்னில்
நாவினுக் கரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ.

172

1435.(இ-ள்.) மணியின் நீடிய சோதிநிறை திருமுன்றில் மாடும் - மணிகளது நீடிய ஒளிநிறைந்த திருமுன்றிலின் பக்கத்தும்; ஆடு உயர் கொடிசூழ் பொன் தேர் அணி திருவீதி உள்ளும் - ஆடுகின்ற உயர்ந்த கொடிகள் சூழ்ந்த அழகிய தேர் செல்லும் அணி வீதிகளினுள்ளும்; கூடிய பணிகள் செய்து - நேர்ந்த திருப்பணிகள் செய்து; கும்பிடும் தொழிலர் ஆகி - கும்பிடுகின்ற தொழிலை உடையவர் ஆகி; பாடிய.....செய்வார் - பாடுகின்ற தூய திருவாக்கினது பணிகளையும் பயிலச் செய்வாராய்,

170

1436.(இ-ள்.) அருள் பெருகி மகிழ்ச்சி பொங்க - அருளைப் பெற்றதனால் உளதாகிய பெருமகிழ்ச்சி மேன்மேலும் பொங்க; "அன்னம் பாலிக்கும்" என்னும் திருக்குறுந் தொகைகள் பாடி" - அன்னம் பாலிக்கும்" என்று தொடங்குகின்ற திருக்குறுந் தொகைகளை அருளிச்செய்து; பெருத்துஎழு....தொண்டு செய்து - மிகப் பெரியதாகி மேலெழுகின்ற காதலுடனே பெரிய திருத்தொண்டினைச் செய்து; விருப்பு உறும் மேனி கண் நீர் வெண் நீற்று வண்டல் ஆட - விருப்பம் பொருந்தும் திருமேனியில் வடியும் கண்ணீரினால் கரைந்த திருவெண்ணீற்றினோடு ஆகிய வண்டல் பொருந்த,

171

1437.(இ-ள்.) மேவிய...நாள் - இவ்வாறு பொருந்திய திருப்பணிகளைச் செய்து விளங்கும் நாட்களில்; வேட்களத்து....பாடி - திருவேட்களத்தில் எழுந்தருளிய இடபத்தை உயர்த்திய கொடியினையுடைய சிவபெருமானைத் திருமுன்பு சென்று வணங்கிப் பாடி; காவியங்கண்டர்....தன்னில் - நீலமலர் போலும் நிறமுடைய அழகிய கண்டமுடைய பெருமான் நிலைபெற்று எழுந்தருளிய திருக்கழிப் பாலையில்; சென்று நாவினுக்கரசர் மண்ணோர் வாழ நண்ணினார் - போய்த் திருநாவுக்கரசு நாயனார் மண்ணுலகத்தவர் வாழும் பொருட்டு நண்ணினார்.

172

இந்த மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1435. (வி-ரை.) மணியின் நீடிய சோதி - என்க. இயற்கை யொளியாதலின் நீடிய என்றார்.

திருமுன்றில் - அம்பலவரது கோயில் திருமுற்றங்கள். மணிகள் - திருமுற்றத்தில் கிடக்கின்றவை. மாயாகாரியங்களாகிய பொன் மணி முதலியவற்றில் விருப்பமில்லாத பெரியோர்களே அம்பலவர் திருமுற்றத்தில் அணைவார்களாதலின் அவை அங்குக் கேட்பாரற்றுக் கிடப்பன; வணங்கவரும் தேவர்களின் முடிகள் மோதுதலினாற் சிந்திய மணிகளும் அங்குக் கிடப்பன என்பது முன்னர்க் (1428) கண்டோம். பின்னர்த் திருப்புகலூரில் திருமுற்றத்தில் திருவருளால் வந்