பக்கம் எண் :


492திருத்தொண்டர் புராணம்

 

விதந்தோதி யுள்ளார். மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தலபுராணம் பாடியுள்ளார்.

சுவாமி - காயாரோகணேசுவரர்; அம்மை - நீலாயதாட்சியம்மை; தியாகர் - சுந்தரவிடங்கர்; நடனம் - தரங்க நடனம்; (தியாகராசருக்கு முன் நம்பிகள் எழுந்தருளியுள்ளார்). தீர்த்தம் கோயிலுக்குத் தெற்கில், தேவதீர்த்தம்; மேற்கில் - புண்டரீக தீர்த்தம். மரம் - மா. பதிகம் 7.

இது நாகபட்டினம் புகை வண்டி நிலயத்தினின்றும் வடமேற்கே? நாழிகையில் அடையத்தக்கது.

1557.

வீழி மிழலை தனைப்பணிந்து, வேத முதல்வர் தாமிருப்ப
ஆழி வலமேந் தியவரியா லாகா சத்தி னின்றிழிந்த
வாழி மலர்ந்த கோயிறனின் மன்னும் பொருளைப் போற்றிசைத்துத்
தாழு நாளிற் பிறபதியும் பணியுங் காத றலைநிற்பார்;

292

1558.

பூவிற்பொலியும்புனற்பொன்னிக் கரைபோய்ப் பணிவார்பொற்பமைந்த
ஆவுக் கருளு மாவடுதண் டுறையார் பாத மணைந்திறைஞ்சி
நாவுக் கரசர் ஞானபோ னகர்க்குச் செம்பொ னாயிரமும்
பாவுக் களித்த திறம்போற்றிப், போந்து, பிறவும் பணிகின்றார்;


1559.

செய்ய சடையார் பழையாறை யெய்த வதனிற் செல்பொழுதின்
மைய லமணர் மறைத்தவட தளியின் மன்னுஞ் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுதருளக், கண்ட வாற்றா லமணர்கடம்
பொய்கொள் விமான மெனக், கேட்டுப், பொறாதவுள்ள மிகப்புழுங்கி,


1560.

 அந்த விமானந் தனக்கருகா வாங்கோ ரிடத்தின் பாங்கெய்திக்
 கந்த மலருங் கடிக்கொன்றை முடியார் செய்ய கழலுன்னி
"மந்த வமணர் வஞ்சனையான் மறைத்த வஞ்ச மொழித்தருளிப்
 பந்தங் கொண்ட வமணர்திறம் பாற்று" மென்று பணிந்திருப்பார்,


1561.

"வண்ணங் கண்டு நானும்மை வணங்கி யன்றிப் போகே" னென்
 றெண்ண முடிக்கும் வாகீச ரிருந்தா ரமுது செய்யாதே;
 அண்ண லாரு மதுவுணர்ந்தங் கரசு தம்மைப் பணிவதற்குத்
 திண்ண மாக மன்னனுக்குக் கனவி லருளிச் செய்கின்றார்.

296

1562.

"அறிவி லமணர் நமைமறைப்ப விருந்தோ" மென்றங் கடையாளக்
 குறிக ளருளிச் செய்தருளி, "நம்மை யரசு கும்பிடுவான்
 நெறியி லமணர் தமையழித்து நீக்கிப் போக்"கென் றருள்புரியச்
 செறிவிலறிவுற் றெழுந்தவனுக்குஞ் செங்கை தலைமேற் வித்திறைஞ்சி


1563.

கண்ட வியப்பு மந்திரிகட் கியம்பிக் கூடக் கடிதெய்தி,
யண்டர் பெருமா னருள்செய்த வடையா ளத்தின் வழிகண்டு,
குண்டர் செய்த வஞ்சனையைக் குறித்து வேந்தன் குலவுபெருந்
தொண்டர் தம்மை யடிவணங்கித், தொக்க வமணர் தூரறுத்தான்;


1564.

ஆனை யினத்திற் றுகைப்புண்ட வமணா யிரமு மாய்ந்ததற்பின்
மேன்மை யரச னீசர்க்கு விமான மாக்கி விளக்கியபின்