(இ-ள்.) வெளிப்படை. அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் நாள்களில் பக்கத்தில் உள்ளனவாகிய சிலாலயங்க ளெங்கும்போய், இனிதாக வணங்கித் துதித்து வந்தவராகிய நாயனார், நீர்வளமிக்க திருவொற்றியூரினைத் தொழுது சென்று, உமையம்மையாரை ஒரு பாகத்தில் வைத்த பெருமான் விரும்பி யெழுந்தருளியிருக்கும் திருப்பாசூர் என்னும் தலத்தினை அணைந்தனர். (வி-ரை.) உறையும் நாளின் கண் - "பல நாள்கள் வைகினார்" என்று முன் பாட்டிற் கூறியபடி வைகும் நாள்களில். அருகுளவாம் சிவாலயங்கள் - இவை வடதிருமுல்லைவாயில், திருக்கள்ளில், புண்ணியகோடீசுவரர் கோயில், ஞாயிறு முதலியன. திருவொற்றியூரி லிருநத் படியே நாயனார் இவற்றுக்குச் சென்று சென்று வணங்சி மீண்டருளியிருந்தனர் என்பதாம். இறையருளால் - பின்னர் அவ்வழியே திருக்காளத்தி செல்வதும், அங்கு நின்றும் திருக்கயிலைப் பெரிய யாத்திரை செய்து காட்சி காண்பதும் குறிப்பு. பொங்கும் புனல் - நீர்வளம் குறித்தது. கடல் வளத்தோடு ஏனை நீர்ச்சிறப்புமுடமை குறிப்பு. "சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் காவுந் துதைந் திலங்கு, பெற்றி.....மற்றிது வொப்பத்தில் லிடம்" (திருவிருத்தம்) என்ற தேவாரம் காண்க. திருவொற்றியூர் தொழுது - ஊர்க்குப்புறம்பே நின்று தலத்தைத் தொழுது. 1594-ம், பிறவும் பார்க்க. அருகுளவாம் ஆலயங்கள் - என்பதும் பாடம். 338 1604. | திருப்பாசூர் நகரெய்திச் சிந்தையினில் வந்தூறும் விருப்பார்வ மேற்கொள்ள வேயிடங்கொண் டுலகுய்ய விருப்பாரைப், புரமூன்று மெரித்தருள வெடுத்ததனிப் பொருப்பார்வெஞ் சிலையாரைத் தொழுதெழுந்து போற்றுவார், |
1605. | "முந்திமூ வெயிலெய்த முதல்வனா" ரெனவெடுத்துச் சிந்தைகரைந் துருகுதிருக் குறுந்தொகையுந் தாண்டகமுஞ் சந்தநிறை நேரிசையு முதலான தமிழ்பாடி யெந்தையார் திருவருள்பெற் றேகுவார் வாகீசர், |
340 1606. | அம்மலர்ச்சீர்ப் பதியையகன் றயலுளவாம் பதியனைத்தின் மைம்மலருங களத்தாரை வணங்கி, மகிழ் வொடும்போற்றி, மெய்ம்மைநிலை வழுவாத மேன்மைநெறி விழுக்குடிமைச் செம்மையினாா பழையனூர்த் திருவால வனம்பணிந்தார்; |
341 1607. | "திருவாலங் காடுறையுஞ் செல்வர்தா"மெனச் சிறப்பி னொருவாத பெருந்திருத்தாண் டகமுதலா மோங்குதமிழ்ப் பெருவாய்மைத் தொடைமாலை பலபாடிப் பிறபதியு மருள்வார்வம் பெறவணங்கி வடதிசைமேல் வழிக்கொள்வார், |
342 1608. | பல்பதியு நெடுங்கிரியும் படர்வனமுஞ் சென்றடைவார் செல்கதிமுன் னளிப்பவர்தந் திருக்காரி கரைபணிந்து, தொல்கலையின் பெருவேந்தர் தொண்டர்கள்பின் னும்பர்குழாம் மல்குதிருக் காளத்தி மாமலைவந் தெய்தினார். |
343 |