பக்கம் எண் :


604திருத்தொண்டர் புராணம்

 

1630.

"கயிலை மால்வரை யாவது காசினி மருங்கு
 பயிலு மானுடப் பான்மையோ ரடைவதற் கெளிதோ?;
 வயில்கொள் வேற்படை யமரரு மணுகுதற் கரிதால்;
 வெயில்கொள் வெஞ்சுரத் தென்செய்தீர் வந்!" தென விளம்பி,


1631.

"மீளு மத்தனை யுமக்கினிக் கட" னென விளங்குந்
 தோளு மாகமுந் துவளுமுந் நூன்முனி சொல்ல,
 வாளு நாயகன் கயிலையி லிருக்கைகண் டல்லான்
 மாளு மிவ்வுடல் கொண்டுமீ ளே" னென மறுத்தார்;

366

1632.

 ஆங்கு மற்றவர் துணிவறிந் தவர்தமை யறிய
 நீங்கு மாதவர் விசும்பிடைக் கரந்துநீண் மொழியா
"லோங்கு நாவினுக் கரசனே! யெழுந்தி" ரென் றுரைப்பத்,
 தீங்கு நீங்கிய யாக்கைகொண் டெழுந்தொளி திகழ்வார்,

367

1633.

"அண்ண லே!யெனை யாண்டுகொண் டருளிய வமுதே!
 விண்ணி லேமறைந் தருள்புரி வேதநா யகனே!
 கண்ணி னாற்றிருக் கயிலையி லிருந்தநின் கோலம்
 நண்ணி நான்றொழ நயந்தருள் புரி" யெனப் பணிந்தார்;

368

1634.

.தொழுதெ ழுந்தநற் றொண்டரை நோக்கிவிண் டலத்தி
லெழுபெ ருந்திரு வாக்கினா லிறைவ"ரிப் பொய்கை
முழுகி நம்மைநீ கயிலையி லிருந்தவம் முறைமை
பழுதில் சீர்த்திரு வையாற்றிற் கா" ணெனப் பணித்தார்.

369

1628. (இ-ள்.) மாசு இல் வற்கலை ஆடையும் - அழுக்கு இல்லாத மரவுரி உடையும்; மார்பில் முந்நூலும் - திருமார்பிற் பூணும் முப்புரி நூலும்; தேசு உடை சடை மவுலியும் - ஒளியுடைய சடை முடியும்; மெய் நீறும் - உடம்பினிடத்து விளங்கும் திருநீறும்; திகழ - (ஆக இவ்வண்ணமாக) விளங்க; ஆசு இல் ... நோக்கி - குற்றமற்ற மெய்ம் முனிவராக நின்ற இறைவரை நோக்கி; பெரியோர் - பெரியவராகிய நாயனார்; பேச உற்றது ஓர் உணர்வு உற விளம்புவார் - பேசுதற்குப் பொருந்திய ஓர் உணர்ச்சி பொருந்த உரைப்பாராகி;

363

1629. (இ-ள்.) வண்டு .......அப்பரிசு - வண்டுகள் உலாவும் கூந்தலையுடைய பார்வதி யம்மையாரோடு வட கயிலாயத்தில் தேவதேவ ராகிய சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் அத்தன்மையினை; அவர் அடியேன்...அடைந்தேன் - அவரது அடியனேன் கண்டு கும்பிடவேண்டுமென்ற விருப்பத்தோடு காதல் மிக அடைந்தேன்; கொண்ட...முனியே! - முனிவரே! மனத்தில் நான் கொண்ட குறிப்பு இதுவாகும்; எனக்கூற - என்று சொல்ல;

364

1630. (இ-ள்.) கயிலை...எளிதோ? - பெருங்கயிலைத் திருமலையானது இப்பூமியிடத்துப் பயிலும் மனிதத்தன்மையுள்ளோர் சென்றடைவதற் கெளிதானதா?; அயில் கொள்... அரிதால் - கூரிய வேற்படை முதலியவற்றை ஏந்திய தேவர்களும் சென்றணுகுதற் கரியது; "வெயில்... வந்து?" என - "வெப்பமிக்க கொடிய இச்சுரத்தினிடை வந்து என்ன அறியாமை செய்துவிட்டீர்!" என்று சொல்லி;

365