பொது - தனித் திருநேரிசை VI - 2. திருச்சிற்றம்பலம் மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன் இருளாவா வறுக்கு மெந்தை யிணையடி நீழ லென்னும் அருளவாப் பெறுத லின்றி யஞ்சிநா னலமந் தேற்குப் பொருளவாத் தந்த வாறே போதுபோய்ப் புலர்ந்த தன்றே. 1 மெய்ம்மையா முழவைச் செய்து விருப்பெனும் விதையை வித்திப் பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித் தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையு ணிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே. 2 காயமே கோயி லாகக் கடிமன மடிமை யாக வாய்மையே தூய்மை யாக மனமணி யிலிங்க மாக நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய வாட்டிப் பூசனை யீச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே. 4 நடுவிலாக் காலன் வந்து நணுகும்போ தறிய வொண்ணா அடுவன வஞ்சு பூத மவைதமக் காற்ற லாகேன் படுவன பலவுங் குற்றம் பாங்கிலா மனிதர் வாழ்க்கை; கெடுவதிப் பிறவி சீ! சீ! கிளரொளிச் சடையி னீரே. 10 திருச்சிற்றம்பலம் பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மருள் அவா - பொய்யை மெய் என்ற மருளினால் வரும் அவா. "பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும் மருள்" (குறள்). பொருள் அவா - மெய்ப் பொருளின்கண் விருப்பம். போது போய்ப் புலர்ந்தது - கெடுங்காலத்துக்கு விடிவு வந்தது.- (2) இப்பாட்டு உழவுபற்றிய உருவகம். சிவகதியாகிய விளைவுக்கு உபாயங்கூறியது. - (3) கரக்கும் - அடக்கித் தோன்றாதபடி செய்யும்.-(4) இப்பாட்டு அகப்பூசை அருச்சனை வழிபாட்டு முறை கூறிற்று. கடிமனம் - தூய அந்தக்கரணம். மனம் அணி இலிங்கம் - மனம் - ஆன்மா; இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமாக - திருமேனியாகக் - |