கொண்டு.-(6) ஆயிரம்.......அமுதன் - நஞ்சுடைய பெரும் பாம்புகள் பலவும் மேற்பூண்டும் (நஞ்சுண்டும்) தனது அமுதத் தன்மையால் சாவாதிருக்கும் தன்மை வாய்ந்தவன். ஆயிரம் - அனேகம். நோய் - மலவாசனைகள். - (7) விள்ள - சொல்ல. வள்ளம் - வாயகன்ற பெரும் பாண்டமாகிய அளவு. உள்ளம் - மனம். உயிர்ப்பு - பிராணவாயுத் தொழில். "என்னுள்ளே யுயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு" (தேவா). கள்ளத்தே - மறைந்தபடி; ஒளிந்து. "உள்ளங்கவர் கள்வன்" (தேவா). "ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்" (திருவா). - (8) அங்கு - இங்கு - இறைவன் றிருவடியும் உலகமும் "அங்கு மிங்கு மாகி யலமருவோர்" (சித். சூத். 8 - 39). "ஈசனே நீயல்ல தில்லை யிங்கு மங்கும்" (திருவா). - (9) புறப்பட்டு - வெளிப்பட்டு விலகி. - (10) நடு - கண்ணோட்டம். "தரியா னொருகணந்தறுக ணாளன்."-(10) படுவன.......சீ! சீ! - மனித வாழ்க்கையின் இழிவு நோக்கியிரங்கியது. பொது - தனித் திருநேரிசை VI - 3. திருச்சிற்றம்பலம் கடும்பக னட்ட மாடிக் கையிலோர் கபால மேந்தி யிடும்பலிக் கில்லந் தோறு முழிதரு மிறைவ னீரே நெடும்பொறை மலையர்ட பாவை நேரிழை நெறிமென் கூந்தற் கொடுங்குழை புகுந்த வன்றுங் கோவண மரைய தேயோ. 1 கோவண முடுத்த வாறுங் கோளர வசைத்த வாறுந் தீவணச் சாம்பற் பூசித் திருவுரு விருந்த வாறும் பூவணன் கிழவ னாரைப் புலியுரி யரையி னாரை யேவணச் சிலையி னாரை யாவரே யெழுது வாரே. 2 விளக்கினார் பெற்ற வின்ப மெழுக்கினாற் பதிற்றி யாகும்; துளக்கினன் மலர்தொ டுத்தாற் றூயவிண் ணேற லாகும்; விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும்; அளப்பில் கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே. 3 சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாம வேதி யந்தரத் தமரர் பெம்மா னானல்வெள் ளூர்தி யான்றன் மந்திர நமச்சி வாய வாகநீ றணியப் பெற்றால் வெந்தறும் வினையு நோயும் வெவ்வழல் விறகிட் டன்றே. 4 புள்ளுவ ரைவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று துள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளைய வொட்டார் முள்ளுடை யவர்க டம்மை முக்கணான் பாத நீழல் உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினா லெய்ய லாமே. 5 உய்த்தகா லுதயத் தும்ப ருமையவ ணடுக்கந் தீர வைத்தகா லரக்க னோதன் வான்முடி தனக்கு நொந்தான்; மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள் மூர்த்தியென் னுச்சி தன்மேல் வைத்தகால் வருந்து மென்று வாடிநா னொடுங்கி னேனே. 10 திருச்சிற்றம்பலம் VI - 1, 2, 3 பதிகக் குறிப்பு :- இத்திருப்பங்கள் சிவானந்தானுபவ உண்மைகள் தனித்தனி நேர்வன பலவற்றையும் கூறுவன. ஒரு தலத்தையேனும், |