வரம்பெற்ற வரலாறு குறிப்பதெனினுமாம். - (5) இப்பாட்டுச் சமணர்கள் சிவனையறியும் நெறியில் நில்லாது பாழாய்க் கழிந்து போகின்றமைக்கு இரங்கியும், அவர் சொற்கேட்டுத் தாம் முன்பு பெருமானை இகழ்ந்தமைக்குப் பரிவுகூர்ந்தும் அருளியது. இருபிறப்பும் - அரிதிற் கிடைத்த இந்த மானிடப் பிறவியும், இனி வரும் பிறவிகளும். சிவனை இகழ்வோர் பலகாலம் பிறந்து பிறந்து வருந்தி நரகத்திற் கிடப்பர் என்ற துணிபுபற்றி வெறுவியராய் என்றார். வெறுவியராதல் - வீணராதல் - வீணே கழிதல். - (6) நின்மலன் - "மாயை கன்மங்களையுங் கடந்து நிற்றலால் அவற்றுள்ளும் ஓரியல்புபற்றி யறியப்படாதவன்" உயிர்களுக்கு மலத்தை நீக்குபவன் என்றலுமாம். நிமலன் - இயல்பாகவே பாசங்களி னீங்கியவன்; (7) குண்டரக்கன் - குண்டர்களுள் அரக்கன் போல்பவன். குண்டுத் தன்மையின் மிகுந்தவன். வீரராக்கதன் - கவிராக்கதன் என்பன போல. குண்டரக்கன் என்பதும் பாடம்; குண்டில் ஆக்கம் - மிகுதி - உடையவன் என்க. குண்டர் - குண்டு ஆழமாய் - ஆழம் பள்ளமாய் - பள்ளம் கீழாய் - குண்டர் என்பது கீழோரைக் குறித்தது என்பர் திவ்யப் பிரபந்த வியாக்கியானகாரர். அமணர்கள் வழங்கும் சில இழிந்த மரபுகள் குறித்து இரங்கி, அவர் சொற்கேட்டுத் தாம் பலநாள் உழன்றமைக்கு வருந்துகின்றார். உணர்வொன்றின்றி - உடனாகி உழிதந்தேன் எனவும், உணர்வின்றிப் பண்டிகழ்ந்தேன் எனவும் உரைக்க இடையில் வைத்தோதினார். 8-11 பாசுரங்களிலும் இவ்வாறே கொள்க. -(10) தொல்லை ... ஆறறியேன் - பழவினைகள் சூழ்ந்ததனால் இப்பிறவியிற் போந்தேன்; அவ்வினையின் வலியால் இப்பிறவியிலும் தூறும் ஆறும் அறிந்து நன்னெறி செல்லமாட்டா தவனானேன். தூறு - முள்ளும் கல்லும் முதலியவற்றால் நிறைந்து நேர் செல்ல மாட்டாமையை விளைக்கும். ஆறு - நேர்வழி. "குழிவழி யாகி வழிகுழி யாகி" என்ற 11-ம் திருமுறை காண்க. சுடராய் நின்று - அவ்வழி வீழாது நல்வழி காட்டும் விளக்காக. இது நாயனார் தமது முற்பிறவியின் விளைவை நினைவு கூர்ந்தருளியது. இடர்தீர்த்து - பிறவிக் கேதுவாகிய அம்மைத் தொல்லை வினையையும், அதன் பயனாக விளைந்த அமண் டொடக்காகிய இம்மை வல்வினையையும் அடக்கி இடர் என்றார். இங்கு அடிமை கொண்ட - சரிதக் குறிப்பின் அகச்சான்று. -(11) இப்பாட்டானும் சமணர்களுள் வழங்கும் சில இழிமரபு குறிக்கப்பட்டது. தவமே என்று அவஞ்செய்து தக்கது ஓரார் - தவமல்லாதவற்றைத் தவம் என்று பிறழ உணர்ந்தும், அவத்தினைச் - தீமையினைச் - செய்தும், தவமாகிய தகுதியுள்ளவற்றை எண்ணாமலும் இம்மூன்று வகையாற் குற்றப்பட்டார் என்க. மதன் - செருக்கின் வலிமை. அறியாமையுமாம். இலைமறித்த கொன்றை - கொன்றை பூக்குங் காலத்து இலைகளே தோன்றாமல் முழுதும் பூவாய் நிறைந்து காணும் தன்மை குறித்தது. தலவிசேடம் - முன்னர் உரைக்கப்பட்டது. பாட்டு 234, பக்கம் 271, பார்க்க. வேறு 1409. | அரியயனுக் கரியானை யடியவருக் கெளியானை விரிபுனல்சூழ் திருவதிகை வீரட்டா னத்தமுதைத் தெரிவரிய பெருந்தகைமைத் திருநாவுக் கரசுமனம் பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப் பலபாடிப் பணிசெயுநாள், |
144 1410. | புல்லறிவிற் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்தொழுகும் பல்லவனுந் தன்னுடைய பழவினைப்பா சம்பறிய, வல்லலொழிந், தங்கெய்தி, யாண்டவர சினைப்பணிந்து, வல்லமணர் தமைநீத்து, மழவிடையோன் றாளடைந்தான். |
145 |