பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்191

 

பதிகக் குறிப்புக்கள் :-

கெடிலவாணர். என்றது காந்தாரபஞ்சமப் பண்ணில் அமைந்தது. இத்திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாசுரமும் கெடிலவாணரே என்ற ஈறுகொண்டு முடியும்; ஆதலின் இப்பதிகம் திருக்கெடிலவாணர் என்று பெயர் வழங்குவது. (1) முளைக்கதிர் - பெருமான் திருமுடியில் வைத்தபின்னர் முளைக்கத் தொடங்கிய கதிர்களுடைய. மழலை - வீணையின் ஓசையை மழலைக்கு உவமிப்பர். கிளைந்துழிப் பொன் தோன்றிடும் கெடிலவாணர் - மண் கிளைத்தவிடத்துப் பொன் தோன்றுமாறு போலப் பாசத்தை நீக்கிய வழித்தோன்றும் கெடிலவாணர். (2) முதன் மூன்றடிகளில் சொற்பின் வருநிலையணி மிக அழகுபட மிக எளிதில் பொருள் புலப்பட அமைந்துள்ளது. ஏழை - அம்மையார். கீறின - கிழித்த. கீறின உடை - மான்தோல், புலித்தோல், யானைத்தோல். (3) விடந்திகழ்கெழுதரும் - கெழு - நிறம். விடத்தாற் கருநிற மிக்க என்க. "குருவுங் கெழுவு நிறனாகுமே" (தொல் - சொல் - உரி. 5). உடம்பு வெள்ளைநிறு அழகெழுதுவர் - திருமேனியில் அழகுபட வெண்ணீற்றினைப் பூசுவர். எழுதுதல் பூசுதல் என்ற பொருளில் வந்தது. "பூசுவதும் வெண்ணீறு (திருவா). அழகு எழுதரு சடை - எழுதருதல் - எழுதல். படர்தல் - நீளுதல். பாய்புனல் கிடந்து அழகு எழுதுதல் யாற்றுநீர் ஒழுக்கினால் சித்திரம் எழுதுவது போல நீர் ஒழுகுவதும் மணல் படுத்தும். -(4) விழுமணி - கிடக்கும் கரிய விட்டுணு. அயில் - கூர். தீக்கடவுள். எயிறு - ஈர். காற்றுக் கடவுள். மூன்றுங்கொண்ட வெய்யது ஓர் அம்பு. "அரிவாளி கூரெரி காற்றின் மும்மதில் வென்றவாறு" (சீகாழி - ஆமாத்தூர் - 1 - பிள்ளையார்). கொழுவிய - அழகிய; நீண்ட மேருமலை - கோத்து வளைத்தனர். கோட்டுதல் - வளைத்தல். வெய்யது - முன்னது, வெம்மை - விருப்பம்; பின்னது, கொடியது.- (5) குழுவினராகி. தழுவினவினை. கழுவுதல் - நீக்குதல்; கெழுவுதல் - பொருந்துதல். "மங்கையோடிருந்தே யோகு செய்வானை" (திருவிசைப் - கருவூர்த் - கங்கை - 11). -(6) கையில் எரிசான்றாக மணஞ் செய்வர் - நயப்பர் - என்றது நயம். தென்றிசைக் கங்கை - 235 பார்க்க. -(8) கிடந்து - சொற்பொருட் பின்வருநிலை. பேதுற - ஐயுற - ஏங்க - நகும் - என்பன நான்கும் தனித்தனி பெயராத பொருட் டற்குற் றிப்பேற்ற வணி; நான்கும் கூடி நாடகச் சுவைபெற அமைந்து உருவகத்தை உள்ளுறுத்ததோர் தற்குறிப்பேற்றவணி. "நாகத்தை நங்கையஞ்ச" (நேரிசை - திருவாரூர். 2) என்றதை ஒப்பு நோக்குக.

II திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

1

கோணன் மாமதி சூடியோர் கேவாண, நாணில் வாழ்க்கை நயந்து பயனிலை;
பாணில் வீணை பயின்றவன் வீரட்டங், காணி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

திருச்சிற்றம்பலம்

தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றமாட்டாது துயில்பெறாது வருந்தும் அகத்திணத் துறைப்பொருளாக வைத்து அருளப்பட்டது இத்திருப்பதிகம். இறைவரது திருவீரட்டத்தினைக் கண்டாலல்லது எனது கண் துயில் கொள்ளுமோ? கண்ட பின்பே துயில் கொள்ளும். அதாவது ஆறுதலை அடையும். காணிலல்லது - நண்ணிலல்லது - கற்கிலல்லது - கற்றாலல்லது - கல்லேனாகில் - கரையேனாகில் - கூறிலல்லது - புலம்பேனாகில் - என் கண் துயில்கொள்ளுமே - என்ற முடிபுகள் காண்க. - (1) பாணில் பண் என்பது எதுகை நோக்கிப் பாண் எனநின்றது. பாணர் பயில் என்றலுமாம். வீணை பயின்றவன் - " கங்காளராய் வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே." உலகம் படைக்குங் காலத்தில் இறைவனிடத்திருந்து வரும் நாததத்துவம் வீணை என்றுபசரிக்கப்படும். "பாடல்