பக்கம் எண் :


540திருத்தொண்டர் புராணம்

 

திருவுலகு அவர்களறிதற்கரிது எனப்பட்டது. திருவுலகு என்றது அதன் தன்மையும் பெருமையும் குறித்தது. அண்டரும் எனச் சிறப்பும்மை தொக்கது.

முதலாம் அவை ஏந்தி - திருப்பணி செய்தற்குரிய உழவாரம் முதலிய ஏனைப் பொருள்கள். எதிர்கொள்ளச் சென்ற தொண்டர்கள் சரியை முதலிய பல நெறியினும் நிற்பவர்களாதலின் அவ்வவரும் திருவேடப் பொலிவுடன் தாந்தாம் செய்யும் திருத்தொண்டின்சாதனங்களை ஏந்திச் செல்லுதலும் தகுதி.

இண்டை...அன்பர் - திருநாவுக்கரசர். தாம் எதிர்கொள்ளச் சென்ற சொல்லுக்கரசராகிய - அந்த - அன்பர் என்று கூட்டுவிரித்துக் கூட்டிக்கொள்க.

குலவும் வேட்கை - என்பதும் பாடம்.

320

1586.

எதிர்கொண்டிறைஞ்சுஞ் சீரடியார் தம்மை யிறைஞ்சி யெழுந்தருளி,
மதில்கொண் டணிந்த காஞ்சிநகர் மறுகுட் போந்து வானநதி,
குதிகொண் டிழிந்த சடைக்கம்பர் செம்பொற் கோயில் குறுகினார்,
அதிர்கொண் டலைநேர் மணிமிடற்றாராண்ட திருநாவுக்கரசர்,

321

1587.

திருவா யிலினைப் பணிந்தெழுந்து செல்வத் திருமுன் றிலையணைந்து
கருவார் கச்சி யேகம்பர் கனக மணிமா ளிகைசூழ்ந்து
வருவார் செம்பொன் மலைவல்லி தழுவக் குழைந்த மணிமேனிப்
பெருவாழ் வினைமுன் கண்டிறைஞ்சிப் பேரா வன்பு பெருகினார்;


1588.

வார்ந்து சொரியுங் கண்ணருவி மயிர்க்கா றோரும் வரும்புளகம்
ஆர்ந்த மேனிப் புறம்பலைப்ப, வன்பு கரைந்தென் புள்ளலைப்பச்,
சேர்ந்த நயனம் பயன்பெற்றுத் திளைப்பத், திருவே கம்பர்தமை
நேர்ந்த மனத்தி லுறவைத்து நீடும் பதிகம் பாடுவார்,

323

வேறு

1589.

"கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானை" யென்றெடுத்துப்
 பரவாய சொன்மாலைத் திருப்பதிகம் பாடியபின்
 விரவார்தம் புரமெரித்த விடையவனார் வெள்ளையெயிற்
 றரவாரம் புனைந்தவர்தந் திருமுன்றிற் புறத்தணைந்தார்,

324

குறிப்பு :- திருநாவுக்கரசர் என்ற எழுவாயைப் பாட்டி னிறுதியில் வைத்தது மன்றி, மேல்வரும் பாட்டுக்களின் வினைகளும் அந்த எழுவாயினையே தழுவி முடிக்க வைத்தமை பற்றி இந்நான்கு திருப்பாட்டுக்களும் ஒரு முடிபாகக் கொள்ளப்பட்டன.

1586. (இ-ள்.) அதிர்....திருநாவுக்கரசர் - அதிரும் மேகம்போன்ற மணிகண்டராகிய பெருமானால் ஆட்கொள்ளப்பட்ட திருநாவுக்கரசர்; எதிர்கொண்டிறைஞ்சும்....எழுந்தருளி - தம்மை எதிர்கொண்டு வணங்கிய சிறப்புடைய அடியார்களைத் தாமும் வணங்கி மேலே எழுந்தருளி; மதில்....போந்து - மதில் சூழ்ந்த அழகிய காஞ்சிமா நகரத்தின் திருவீதியினுள் போந்து; வானநதி....குறுகினார் - ஆகாய கங்கை குதித்து வழியும் சடையினையுடை திருவேகம்பருடைய செம்பொற் கோயிலை வந்தடைந்தனராகி;