பக்கம் எண் :

162தணிகைப் புராணம்

கரத்தை நீண்ட நாவினாற்றுதித்துத் திருவாடை யின்கட் டங்கப்பெற்ற மேகலா பரணத்தை யணிந்த அல்குலையுடைய உமாதேவியாரைப் பாகத்திலேயுடைய சிவபெருமான் புகழை அதிகமாகத் தங்கச் செய்கின்ற செவியினை
யுடையவர்களாவார்கள்.

(வி - ம்.) அழுத்து - தங்கிய. அழுத்தி - இருத்தி. பஞ்சு - ஆடை. சொல் - புகழ். விஞ்ச - மிக; ஈறுதொக்கது. அழுத்து - நிறைக்கின்ற.

(8)

 இன்ன வாய மேன்மைசான் றியாணர் வண்மை நாடொறும்
 மன்னு கின்ற நைமிச வனத்து வேறு மாதவர்
 நன்னர் யூப மாமக நடாத்த லைக்கு றித்தரோ
 துன்னும் வேலை யேழும்வந்து தொக்க தென்ன முற்றினார்.

(இ - ள்.) இத்தன்மையான் மேன்மை மிகுந்து புதிதாகிய வள்ளற்றன்மை நிலைபெறுகின்ற நைமிசாரணியத்தின்கண் வேறிடத்துள்ள பெரிய தவத்தினர் நல்ல யாகத்தூணை நாட்டி மகஞ்செய்தலைக் கருதி ஒன்றோடொன்று பொருந்திய எழுகடலும் வந்து ஆண்டுக் கூடிய தென்று சொல்லும்வண்ணம் கூடினார்.

(வி - ம்.) யாணர் வண்மை - புதிதாகிய வள்ளற்றன்மை, யூபம் யாகத்தினாட்டுந்தூண். முற்றினார் - அடைந்தார்.

(9)

வேறு

 பிருகு வுக்கிர சீலன் போதா யணன்பி சிங்கிவி பாண்டகன்
 துருவ னாரதன் சுப்பி ரன்புதன் சுமதி யத்திரி சங்கமன்
 அரித கன்பவு லன்சு முந்தர னாபத் தம்பன கத்தியன்
 கருண னங்கிர சன்ப ருப்பதன் காத்தி யாயணன் கண்ணுவன்.

(இ - ள்.) பிருகும், உக்கிரசீலனும், போதாயணனும், பிசுங்கியும் விபாண்டகனும், துருவாசனும், நாரதனும், சுப்பிரனும், புதனும், சுமதியும், அத்திரியும், சங்கமனும், அரிதகனும், பவுலனும், சுமுந்தரனும், ஆபத்தம்பனும், அகத்தியனும், கருணனும், அங்கிரசனும், பருப்பதனும், கார்த்தியாயணனும், கண்ணுவனும்.

(10)

 பவுமன் பாசத ரன்ப ராசரன் பங்கு பப்புரு பக்குவன்
 கவுசி கன்கபி லன்க லாதரன் காணன் காலன்கை வல்லியன்
 கவுத மன்சர பங்கன் முற்கலன் காலவன் பண்டி தோத்தமன்
 சவுன கன்சதா னந்தன் வாரன்சா தாத பன்சம தக்கினி.

(இ - ள்.) பவுமனும், பாசதரனும், பராசரனும், பங்கென்பவனும், பப்புரு என்பவனும், பக்குவனும், கவுசிகனும், கபிலனும், கலாதரனும், காணனென்பவனும், காலனும், கைவல்லியனும், கவுதமனும், சரபங்கனும், முற்கலனும், காலவனும், பண்டிதோத்தமனும், சவுனகனும், சதானந்தனும், வாரனென்பவனும், சாதாதபனும், சமதக்கினியும். இதனை அண்மினர் (13) என்ற வினைமுற்றுடன் முடிக்க.