பக்கம் எண் :

276தணிகைப் புராணம்

(வி - ம்.) உத்தாலகவாரணியம் - குற்றாலம். பதியிரண்டாவதன் றொகை ஆணவவித்தென மாற்றுக. அத்தானம் - ஈண்டுச் சத்திய வுலகம்.

(6)

வேறு

 கரந்து வைகினுங் கற்றவர் தம்புகழ்
 நிரந்து தோற்றப் படுவது நேர்மணுள்
 பரந்த வேர்ப்பல வின்பழம் யாவர்க்கும்
 சுரந்த வாசத்திற் றோற்றுமொர் பாலெலாம்.

(இ - ள்.) ஒருபாலெல்லாம் மண்ணுட்பரவிய வேர்ப்பலாவின் பழம் யாவர்க்கும் நிறைந்த வாசத்தினாற் றோன்றாநிற்கும். (அங்ஙனந் தோன்றாநின்ற லென்போலவெனின்) எல்லா நூல்களையுங் கற்றவர் மறைந்து தங்கினாலும் அவர் புகழ் யாண்டும் வியாபித்துத் தோற்றப் படுவதற்கு ஒப்பாகும்.

(வி - ம்.) நிரந்து - கலந்து; வியாபித்து. நேராகும் - விகாரம். பரந்த - பரவிய. சுரந்த - நிறைந்த. "நிரைத்த தீவினை" யென்னும் செய்யுளின் "தரைத்த லத்தக மார்ந்ததொர் பாலெலாம்" (சிந்தாமணி) என்றாற் போலக் கொள்க.

(7)

 உறும்ப லாயிர வண்டமு டம்பெலாம்
 பெறும்ப ராபரன் பெற்றிநி கர்ப்புற
 நறும்ப லாயிர நன்கனி தூங்கிய
 குறும்ப லாவின் குழாமொரு பாலெலாம்.

(இ - ள்.) மிக்க பல்லாயிரவண்டங்கள் தனது திருமேனி யெங்கணுந் தங்கப்பெறுகின்ற மேலாகிய இறைவன்றன்மையை யொப்ப நல்ல பல வாயிரக்கணக்கான முதிர்ந்த கனிகள் தூங்குகின்ற குறும்பலாவின் கூட்டங்கள் ஒருபாலெல்லாம் உள்ளன.

(வி - ம்.) இஃது உவமையணி. உறும் - மிக்க. பெற்றி - தன்மை.

(8)

 ஆண வப்பிணி நீங்கவ ரும்பயன்
 மாண நல்கரன் மானமந் திக்குலம்
 காணு மென்கறி யைக்கறித் தாழ்பறழ்க்
 கூணி ருங்கனி யூட்டுமொர் பாலெலாம்.

(இ - ள்.) ஆணவமாகிய நோய் நீங்கலால் பெறுதற்கரிய வீட்டின்பமாகிய பயனை மிகவுண்பிக்கின்ற இறைவனை யொப்பக் குரங்கின் கூட்டங்கள் எதிரே காணப்பெறுகின்ற மிளகைக் கடித்துறைத்தலால் துன்பத்திலாழ்கின்ற குட்டிகளுக்கு (அவ்வுறைப்பு நீங்க) உண்ணத்தக்க சுவையின் மிகுந்த பழங்களை யொருபகுதியி னிடங்களிலெல்லாம் உண்பிக்கும்.

(வி - ம்.) நீங்க - செயவெனெச்சங் காரணப்பொருட்டு. நல்கு - ஊட்டுகின்ற. கறி - மிளகு. ஆழ் - (உறைப்பாற்) துன்பத்திலாழ்கின்ற,