5. | இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை; பகைமை அன்பினாலேயே தணியும். இதுவே பண்டை அறநெறி. | (5) | | | | 6. | 'நமக்கும் இங்கே முடிவுண்டு' என்பதைச் சிலர் அறிவதில்லை! ஆனால் அறிந்தவர்களுடைய பிணக்குகள் உடனே தீர்ந்துவிடும். | (6) | | | | 7. | புலன்களை அடக்காமல், உணவில் நிதானமில்லாமல், மடிமையில் ஆழ்ந்து, வீரியம் குறைந்து, இன்பங்களுக்காகவே வாழ்ந்து வருவோனை, வலியற்ற மரத்தைக் காற்று வீழ்த்துவதுபோல, மாரன்1 முறியடிக்கிறான். | (7) | | | | 8. | புலனடக்கத்தோடு, நிதான உணர்வுடனும், நல்லறத்திலே நாட்டத்துடனும், நிறைந்த வீரியத்துடனும் இன்பங்களை எதிர்பாராமல் வாழ்ந்து வருவோனை, பாறைகள் நிறைந்த மலையைச்சூறாவளி அசைக்க முடியாதது போல மாரன் வெல்லமுடியாது. | (8) | | | | 9. | மனமாசுகள் நீங்காமல், எவன் அடக்கமும் உண்மையும் இல்லாதவனோ, அவன் சீவர உடைக்கு2 அருகனல்லன். | (9) | | | | 10. | மனமாசுகள் நீங்கி, எவன் சகல சீலங்களிலும் நிலைத்து நின்று, அடக்கமும் உண்மையும் உள்ளவனோ, அவனே சீவர உடைக்கு உரியவன். | (10) | | | | 11. | பொய்யில் மெய்யைக் கற்பனை செய்துகொண்டு, மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையார் | |
1 | மாரன் - சன்மார்க்க விரோதி, சைத்தானைப் போன்றவன்; மாரன் என்று கூறப்படும் மன்மதன் அல்லன். | 2 | சீவர உடை - காஷாயம், துறவிகளின்மஞ்சள் ஆடை. |
|
|
|