76. | குற்றங்களைக் கண்டித்து, விலக்க வேண்டியவைகளை விலக்கக்கூடிய ஞானியைக் கண்டால்ஒருவன், அந்த ஞானி புதையல் பொக்கிஷங்களுக்கு வழிகாட்டுவோன் என்று கருதி, அவரைப் பின்பற்ற வேண்டும். அத்தகைய மனிதரைப் பின்பற்றுவதால் நன்மையே தவிர தீமையில்லை. | (1) |
| | |
77. | அவர் கண்டிப்பார், அறிவு புகட்டுவார், தீயோரிடமிருந்து விலக்குவார். நல்லோர் அவரை நேசிப்பர். தீயோரே வெறுப்பர். | (2) |
| | |
78. | தீயோருடன் சேரவேண்டாம்; இழிந்தவருடன் இணக்கம் வேண்டாம்; ஒழுக்கமுள்ளவரோடு உற வாடுக; சான்றோர் தொடர்பை மேற்கொள்க. | (3) |
| | |
79. | தருமத்தைப் பருகுவோன். மேலோர் அறிவுறுத்திய தருமத்தில் அவன் எப்போதும் இன்புற்றுக்கொண் டிருக்கிறான். | (4) |
| | |
80. | நீரை நெறிப்படுத்திச்செலுத்துவர் சிற்பக்கலைஞர்1; அம்பை நேராக நிமிர்த்துவர் வில்லாளிகள்; மரத்தில் (சித்திரங்கள்) பொறிப்பார்கள் தச்சர்கள்; தம்மைத் தாமே அடக்கியாள்வர் அறிஞர். | (5) |
| | |
81. | நிலையான பாறை புயல் காற்றுக்கும் அசையாம லிருப்பது போல், ஞானிகள் புகழ்ச்சிக்கும், இகழ்ச் சிக்கும் அசைவதில்லை. | (6) |