165. | அதருமத்தில் செல்ல வேண்டாம்; அசட்டையாக வாழ வேண்டாம். தவறான கொள்கையைக் கைக்கொள்ள வேண்டாம். உலகத்தின் (பற்றோடு)உறவு கொள்ள வேண்டாம். | (1) |
| | |
166. | விழித்தெழுக! கருத்தில்லாமல் இருக்கவேண்டாம் தரும ஒழுக்கத்தைக் கடைப்பிடி. தரும வழியில் நடப்பவனுக்கு இகத்திலும் சுகம். பரத்திலும் சுகம். | (2) |
| | |
167. | தரும ஒழுக்கத்தில் நடப்பாயாக, தீயொழுக்கத்தில் செல்லவேண்டாம், தரும வழியில் நடப்பவனுக்கு இகத்திலும் சுகம், பரத்திலும் சுகம். | (3) |
| | |
168. | வையகத்தை நீர்க் குமிழியாகவும், கானல் நீராகவும் காண்பவனை எமதர்மன் கண்டுகொள்ள முடியாது. | (4) |
| | |
169. | இந்த உலகம் அரசனுடைய அலங்கரிக்கப் பெற்றதேர் போல் ஜொலிப்பதை வந்து பார்! பேதைகள் இதிலே ஆழ்ந்து விடுகிறார்கள். ஞானிகளுக்கு இதிலே பற்றில்லை. | (5) |
| | |
170. | முன்னால் சிந்தனையற்றிருந்து, பின்னால் விழிப்படைந்து தெளிந்தவன், மேகத்திலிருந்து விடு பட்ட சந்திரனைப் போல் இந்த உலகை ஒளிபெறச் செய்கிறான். | (6) |
| | |
171. | பாவத்தை நல்வினையால் மறைக்கும் ஒருவன் மேகத்திலிருந்து விடுபட்ட சந்திரனைப்போல், இந்த உலகை ஒளிபெறச் செய்கிறான். | (7) |