இலக்கணக் கொத்து நூல் இந்நூல் கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறைச் சுவாமிநாத தேசிகரால் இயற்றப்பட்டது. இது தொல்காப்பிய இலக்கண நூலினும் தொல்காப்பியங்களிலும் அருகிக்கிடந்த விதிகளைப் பெருகத் திரட்டி வடமொழி இலக்கண வழக்கும் சில விராய்க் கூறும் நூலாகும். இது வேற்றுமையியல், வினையியல், ஒழிபியல் என்னும் மூன்றியல்களாய்ச் சொல்லிலக்கண நுட்பம் தெள்ளிதின் துறைப்படுத்து உணர்த்தும் ஒரு சிறப்புடை நூலாகும். - திராவிடப் பிரகாசிகை. |