பக்கம் எண் :

82ஆத்மாநாம் படைப்புகள்

காக வேதம்

எழும்பும் நற்காக்கைக் கூட்டம்
சிற்சில வேர்க்கடலைக்காக
நோயுற்ற மனிதரெல்லாம்
தங்களைத் தேற்றிக்கொண்டார்

எழும்பிடும் மேலே தாவும்
அணியணியாய்க்
கடற்காற்றின் உப்பொடு
காத்திருக்கும்
இன்னும் சில பருக்கைக்காகக்

கடைசியாய்ப் பறந்த காக்கை
உரத்துச் சொல்கிறது
தான் ஒரு காக்கை என்று