பக்கம் எண் :

41மீரா

என் வேதனை பன்மடங்காகிறது... மனம் உருகுகிறது ...

என் குரல் உன் காதில் விழவில்லையா.... உனக்குக் காது இருக்கிறதே. நீ காதறுந்த பழஞ்செருப்பு இல்லையே ... புதுச் செருப்பல்லவா... என்னிடமிருக்கும்போது முகம் பார்க்கலாமே... அவ்வளவு வலிவோடும் பொலிவோடும் இருந்தாயே... கண்ணாடி போல் வைத்திருந்தேனே...

எவ்வளவு தேய்த்து விட்டாய், எவ்வளவு மெலிந்து விட்டாய்...

எப்படியோ... நீ எங்கிருந்தாலும் வாழ்க!

15-11-83