|
|
செய்யுள்
11
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நிலையினிற்
சலியா நிலைமை யானும்
பலவுல கெடுத்த வொருதிறத் தானு
நிறையும் பொறையும் பெறுநிலை யானுந்
தேவர் மூவருங் காவ லானுந்
தமனியப் பராரைச் சைல மாகியு |
10
|
|
மளக்கவென்
றமையாப் பரப்பின தானு
மமுதமுந் திருவு முதவுத லானும்
பலதுறை முகத்தொடு பயிலுத லானு
முள்ளுடைக் கோட்டு முனையெறி சுறவ
மதிர்வளை தடியு மளக்க ராகியு |
15
|
|
நிறையுளங்
கருதி னிகழ்ந்தவை நிகழ்பவை
தருதலின் வானத் தருவைந் தாகியு
மறைவெளிப் படுதலிற் கலைமக ளிருந்தலி
னகமலர் வாழ்தலிற் பிரம னாகியு
முயிர்பரிந் தளித்தலிற் புலமிசை போக்கலிற் |
20
|
|
படிமுழு
தலந்த நெடியோ னாகியு
மிறுதியிற் சலியா திருந்த லானு
மறுமைதந் துதவு மிருமை யானும்
பெண்ணிடங் கலந்த புண்ணிய னாகியு
மருள்வழி காட்டலி னிருவிழி யாகியுங் |
25
|
|
கொள்ளுநர்
கொள்ளாக் குறையா தாகலி
னிறையுள நீங்கா துறையரு ளாகியு
மவைமுத லாகி யிருவினை கெடுக்கும்
புண்ணியக் கல்வி யுண்ணிதழ் மாக்கள்
பரிபுரக் கம்பலை யிருசெவி யுண்ணுங் |
|
|
குடக்கோச்
சேரன் கிடைத்திது காண்கென
மதிமலி புரிசைத் திருமுகங் கூறி
யன்புருத் தரித்த வின்பிசைப் பாணன் |