|
|
செய்யுள்
12
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
குரவ
மலர்ந்த குவையிருட் குழலி
யிருவே மொருகா லெரியத ரிறந்து
விரிதலைத் தோன்முலை வெள்வா யெயிற்றியர்க்
கரும்புது விருந்தெனப் பொருந்திமற் றவர்தரு
மிடியுந் துய்த்துச் சுரைக்குட மெடுத்து |
10
|
|
நீணிலைக்
கூவற் றெளிபுன லுண்டும்
பழம்புற் குரம்பை யிடம்புக் கிருந்து
முடங்கத ளுறுத்த முகிணகை யெய்தியு
முடனுடன் பயந்த கடவொலி யேற்று
நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்து |
15
|
|
முயர்ந்தவின்
பதற்கின் றுவம முண்டெனின்
முலைமுன் றணந்த சிறுநுதற் றிருவினை
யருமறை விதிக்கத் திருமணம் புணர்ந்து
மதிக்குலம் வாய்த்த மன்னவ னாகி
மேதினி புரக்கும் விதியுடை நன்னா |
20
|
|
ணடுவூர்
நகர்செய் தடுபவந் துடைக்கு
மருட்குறி நிறுத்தி யருச்சனை செய்த
தேவ நாயகன் கூடல்வா ழிறைவன்
முண்டக மலர்த்தி முருகவி ழிருதா
ளுறைகுந ருண்ண மின்ப |
|
|
மறைய
லன்றி மற்றொன்று மடாதே. |