114கல்லாடம்[செய்யுள்13]



முன்னது திங்கல். ஏனையது அறிவு. அறிவு ஈண்டு அறிந்து செய்யப்படும் செயலைக் குறித்து நின்றது. நின் நாயகம்-நின் தலைமைத் தன்மையுடைய செயல் என்க. அன்புடையோர் நண்பினைப் பிரித்தல் தீவினை ஆதலின் பெருந்தகையாகிய நினக்கு இத்தீச்செயல் செய்தல் தகுமோ என்று பழித்தவாறு என்க. இனி அச்சமே கீழ்மக்களது ஆசாரம் என்பது பற்றித் திங்களை அச்சுறுத்துவாள் திங்களே ஈண்டும் ஒரு நாகம் உளது என்பது பட நாகந்தொழ அம்பலம் நண்ணி நடம் நவில்வோன் என்றாள். நாகம்வர-யானை போன்ற எம்பெருமான் வாரா நிற்ப என்க. நள்ளிருள்-செறிந்த இருள்; இடையாமம். நற-தேங் சொல்லானும் அச்சுறுத்துவாள் சிலேடை வகையால் இப்பொழில் நாகம் மலி பொழில் என்றாள். நாகத்தால் விழங்கப்படும் நீ நாகந்தொழும் அம்பலத்து நடம்பயில்வோனது மலைகட் புகுந்து நாகம்மலி பொழிலில் ஆட்சிபுரிதல் நினக்கு நன்றி பயவாதென்பது கருத்து. தனிநாயகம் என்பதூஉம் பாடம். மெய்ப்பாடு-வெகுளி. பயன்-இடையூறுணர்த்துதல்.

 
 

செய்யுள் 13

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நண்ணிய பாதி பெண்ணினர்க் கமுத
மடுமடைப் பள்ளியி னடுவவ தரித்தும்
திருவடி வெட்டினு ளொருவடி வாகியும்
முக்கணி லருட்கண் முறைபெற முயங்கியும்
படியிது வென்னா வடிமுடி கண்டும்
10
  புண்ணிய நீறெனப் பொலிகதிர் காற்றியும்
நின்றனை பெருமதி நிற்றொழா தேற்கு
நன்னரிற் செய்குறு நன்றியொன் றுளதால்
ஆயிரந் தழற்கரத் திருட்பகை மண்டிலத்
தோரொரு பனிக்கலை யொடுங்கிநின் றடைதவிற்
15
  கொலைநுதி யெயிறென் றிருபிறை முளைத்த
புகர்முகப் புழைக்கை யொருவிசை தடித்தும்
மதுவிதழ்க் குவளையென் றடுகண் மலர்ந்த
நெடுஞ்சுனை புதையப் புகுந்தெடுத் தளித்தும்
செறிபிறப் பிறப்பென விருவகை திரியும்
20
  நெடுங்கயிற் றுசல் பரிந்துகலுழ் காலை
முன்னையிற் புனைந்து முகம னளித்தும்
தந்தவெங் குரிசி றனிவந் தெமது
கண்ணெனக் கிடைத்தெங் கண்ணெதிர் நடுநாட்
சமயக் கணக்கர் மதிவழி கூறா