|
|
செய்யுள்
15
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கல்லுயர்
வரைதோட் செம்மனக் குரிசிலுங்
கல்லாத் தவறுளம் புல்லிய குழலு
மிம்மனை நிறைபுகுந் தெழின்மணம் புணரக்
கோளொடு குறித்து வரும்வழி கூறிய
மறைவாய்ப் பார்ப்பான் மகனும் பழுதிலன் |
10
|
|
சோதிடக்
கலைமக டோற்றம் போலச்
சொரிவெள் ளலகரும் பழுதில் வாய்மைய
ருடறொடு குறியின் வரும்வழி குறித்த
மூதறி பெண்டிருந் தீதில ரென்ப
பெருந்திரட் கண்ணுட் பேச்சுநின் றோர்ந்து |
15
|
|
வாய்ச்சொற்
கேட்டநன் மதியரும் பெரிய
ராய்மலர் தெரிந்திட்டு வான்பலி தூவித்
தெய்வம் பராய மெய்யருந் திருவினர்
கருங்கொடி யடம்புங் கண்டலுஞ் சூழ்ந்த
பனைக்குடிப் பரதவர் கலத்தொடு மறியச் |
20
|
|
சுரிமுகச்
செவ்வாய்ச் சூல்வளை தெறிப்பக்
கழுக்கடை யன்ன கூர்வாய்ப் பெருங்கட்
பனைகிடந் தன்ன வுடன்முத றுணிய
வாருயிர் கவருங் காருடற் செங்கட்
கூற்றமுருத் தெழுந்த கொள்கை போல |
25
|
|
நெட்டுடற்
பேழ்வாய்ப் பெருஞ்சுறவு தடியும்
வரைநிரை கிடந்த திரையுவர் புகுந்து |