மூலமும் உரையும்157



ஆயிற்று. அத்தழை பற்றுக்கோடாக வன்றோ எம்பெருமாட்டி இதுகாறும் ஆற்றியிருந்ததும் என்பது குறிப்பெச்சம். இருந்துதி-பெரிய வாழ்த்து. என்வயின் கொண்டவன் என்றது எளியோனாகிய என்னிடத்து உண்டாக்கிக் கொண்டவன் என்பதுபட நின்றது. தில்லை வாழ்த்தினர் வாடாதிருத்தல்போல என்க. இனித் திவண்டன வென்பதற்கு வாடாதிருந்து இவளைத் தீண்டி இன்புறுத்தின வென்றுரைப்பினும் அமையும். தழை வாடாதிருந்தன என்றது முன்னர்த் தான் அவன் தந்த தழையை ஏற்ற முழக்கத்தை கொண்டாடியபடியாம். மெய்ப்பாடு: உவகை பயன்: மகிழ்தல்.

 
 

செய்யுள் 18

நேரிசையாசிரியப்பா

 
   
5
  குங்குமக் கோட்டல ருணங்கலர் கடுக்கும்
பங்குடைச் செங்காற் பாட்டளி யரிபிடர்க்
குருவிற் றோய்ந்த வரிகெழு மரகதங்
கல்லெனக் கிடப்பச் சொல்லிய மேனித்
திருநெடு மாலிஉக் கொருவிசை புரிந்து
10
  சோதிவளர் பாக மீந்தரு ணித்தன்
முனிவ ரேமுற வெள்ளியம் பொதுவின்
மனமுங் கண்ணுங் கனியக் குனிக்கும்
புதிய நாயகன் பழமறைத் தலைவன்
கைஞ்ஞின் றவன்செங் கால்கண் டனர்போல்
15
  விளக்கமும் புதுமையு மளப்பில் காட்சியும்
வேறாப் பெடுத்துக் கூறுவது நீக்கமு
மறிவோர் காணுங் குறியா யிருந்தன
விருந்திண் போர்வைப் பிணிவிசி முரச
முன்ன மெள்ளினர் நெஞ்சுகெடத் துவைப்ப
20
  மணங்கொள் பேரணி பெருங்கவின் மறைத்ததென்
றெழுமதி குறைத்த முழுமதிக் கருங்கயல்
வண்டு மருவி யுண்டு களியாது
மற்றது பூத்த பொற்றிகழ் தாமரை
யிரண்டு முகிழ்செய்து நெஞ்சுறப் பெருகும்
25
  வற்றா மேனி வெள்ளத்துண் மறிய
நுனித்தலை யந்தனர் கதழெரி வலர்த்துச்
சிவந்த டாய்தோறும் வெண்பொரி சிதறச்
செம்மாந்து மணந்த வளிய கூரெரி
மும்முறை சுழன்று தாயருண் மகிழ