2கல்லாடம்[கடவுள்வாழ்த்து]



 
 
 விருத்தம்
     
 
 

வடிவெடுத்து வேதமன்பிற் பாடுகினு
     மறிந்தறியா வண்ணம் வைகும்
பொடியணியுந் திருமேனிப் புனிதன்மது
     ரைக்கிறைவன் புகழின் பாடல்
நெடியகவிக் கல்லாடர் பொருட்டுறையை
     நிகழ்த்துதொறு நிலவு சூடும்
முடியசைத்து நன்றுநன்றீ தெனமகிழு
     மெனினிகராய் மொழிவ தியாதே.

 
 
மூத்தபிள்ளையார் வாழ்த்து
நேரிசை யாசிரியப்பா
 
   
5
  திங்கண்முடி பொறுத்த பொன்மலை யருவி
கருமணி கொழித்த தோற்றம் போல
இருகவுள் கவிழ்ந்த மதநதி யுவட்டின்
வண்டினம் புரளும் வயங்குபுகர் முகத்த
செங்கதிர்த் திரளெழு கருங்கடல் போல
10
  முக்கண்மேற் பொங்கும் வெள்ளமெறி கடத்த
பெருமலைச் சென்னியிற் சிறுமதி கிடந்தெனக்
கண்ணரு ணிறைந்த கவுன்பெறு மெயிற்ற
ஆறிரண் டருக்க ரவிர்கதிர்க் கனலும்
வெள்ளைமதி முடித்த செஞ்சடை யொருத்தன்
15
  உடலுயி ராட வாடுறு மனலமும்
தென்கீழ்த் திசையோன் தெறுதரு தீயும்
ஊழித் தீப்படர்ந் துடற்றுபு சிகையும்
பாசக் கரகம் விதியுடை முக்கோல்
முறிக்கலைச் சுருக்குக் கரம்பெறு முனிவர்
20
  விழிவிடு மெரியுஞ் சாபவாய் நெருப்பு
நிலைவிட்டுப் படராது காணியி னிலைக்கச்
சிறுகாற் றுழலு மசைகுழைச் செவிய
ஆம்பன்முக வரக்கன் கிளையொடு மறியப்
பெருங்காற்று விடுத்த நெடும்புழைக கரத்த
  கருமிடற்றுக் கடவுளைச் செங்கனி வேண்டி
இடங்கொண் ஞாலத்து வலங்கொளும் பதத்த