திருக்கோவையார் 174 ஆம் செய்யுள்
காமமிக்க கழிபடர்கிளவி
அஃதாவது:
தலைவனைப் பிரிந்துரைகின்ற தலைவி பெரிதும் வருந்தித் தன் மருங்குள்ள பொழில் முதலியவற்றை
விளித்து நீவிர் இங்ஙனம் வருந்தும் என்னை, உனக்குற்ற துயர் யாது என்று ஒரு முறையேனும்
வினவுகின்றிலீர்!; உங்கள் அன்பு இதுதானோ என்று அவற்றொடு புலந்து கூறுதல் என்பதாம்.
அதற்குச் செய்யுள்:-
மாதுற்ற மேனி
வரையுற்ற
வில்லிதில் லைநகர்சூழ்
போதுற்ற பூம்பொழில் காள்கழி
காளெழிற் புள்ளினங்காள்
ஏதுற் றழிதியென் னீர்மன்னு
மீர்ந்துறை வர்க்கிவளோ
தீதுற்ற தென்னுக்கென் னீரிது
வோநன்மை செப்புமினே.
|
தாமமிக்க தாழ்குழலோழை காமமிக்க கழிபடர் கிளவி
(இ-ள்) மாது உற்ற
மேனி-ஒருபால் உமையம்மையார் பொருந்திய திருமேனியையும்; வரை உற்ற வில்லி-மலையாகிய
வலிமை மிக்க வில்லினையும் உடைய கூத்தப் பெருமானுடைய; தில்லைநகர் சூழ்-தில்லைமாநகரைச்
சூழ்ந்தமைந்த; போது உற்ற பூம்பொழில்காள்-நாளரும்புகள் பொருந்திய மலர்களோடு கூடிய
பொழில்களே; கழிகாள்-அப்பொழிலைச் சூழ்ந்துள்ள கழிகளே; எழில் புள்ளினங்காள்-அக்கழிகளில்
பயிலும் அழகிய பறவைகளே; ஏது உற்று அழுதி என்னீர்-நும்மோடு பெரிதும் பழகிய யான்
உற்ற வருத்தம் கண்டு வைத்தும் என்னை நோக்கி நீ எவ்வருத்தம் எய்தி இவ்வாறு அழிகின்றாய்
என்று ஒரு முறையேனும் வினவுகின்றிலீர்; ஈர்ந்துறைவார்கு-குளிர்ந்த கடற்றுறையினையுடைய
தலைவருக்கு; இவள் தீது உற்றது என்னுக்கு என்னீர்-இவள் துன்பமுற்றது எதன்பொருட்டோ
என்று நும்முளும் உசாவுகின்றில்லீர்; இதுவோ நன்மை-இதுவோ எங்களிடத்து நீயிர் கொண்ட
அன்புடைமை; செப்புமின்-சொல்லுமின் என்றவாறு.
(வி-ம்.)
மாதுற்றமேனி என்பது அன்மொழித் தொகையாய் மேனியை உடையான் என்னும் பொருள்பட நின்றது
எனினும் அமையும். இனி வரையுற்ற வில்லி என்பதற்கு வரைத்தன்மையைப் பொருந்
|