மூலமும் உரையும்225



அண்ணியன் என்ற கருத்ட்க்ஹால் எம்பரன் என்றாள். பரன்-எப்பொருளையும் கடந்தவன். வெற்பிற் சிலம்ப என இயையும். பந்தி-பலாநிரை என்பாருமுளர். சிலம்பென்றது வெற்பின் ஒரு பக்கத்துள்ள சிறு குவட்டினை. வாய்மொழி-மொழி என்னும் துணையாய் நின்றது. மனங்கனியுமென்பதூஉம் நின்வாய்மொழி என்பதூஉம் பாடம். மந்தி உயிர் வாழ்வதற்குக் காரணமாகியவற்றைக் கடுவன் தானே கொடுத்து மனமகிழ்வித்தாற்போல அவள் உயிர் வாழ்வதற்குக் காரணமாகிய நின் மொழிகளை நீயே கூறி அவளை மனமகிழ்விப்பாயாகவென உள்ளுறை உவமம் கண்டு கொள்க. மொய்குழல்: அன்மொழித்தொகை. மெய்ப்பாடு-அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்-செவ்வி பெறுதல்.

 
 

செய்யுள் 25

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வேற்றுப் பிடிபுணர்ந்து தீராப் புலவி
சுற்றமொடு தீர்க்க வுய்த்த காதலிற்
கருங்கைவெண் கோட்டுச் சிறுகட் பெருங்களி
றுளத்துநின் றளிக்குந் திருத்தகு மருநூல்
பள்ளிக் கனக்கர் பாற்பட் டாங்குக்
10
  குறிஞ்சிப் பெருந்தே னிறாலொடு சிதைத்து
மென்னடைப் பிடிக்குக் கைப்பிடித் துதவி
யடிக்கடி வணங்குஞ் சார னாட
வந்தன ரிருக்கை யகல்வோர் சூழ்ந்தென
நன்னயங் கிடந்த பொன்னகர் மூடிப்
15
  புலைசெய் துடன்று நிலைநிலை தேய்க்குந்
தள்ளா மெய்ம்பி னுள்ளுடைந் தொருகால்
வேதியன் முதலா வருமரு மரசனும்
போதுது யிரப்பப் புணரா மயக்க
நாரண னடித்த வெழுவாய்த் தருக்கத்
20
  தறிவுநிலை போகி யருச்சனை விடுத்த
வெள்ளமுர ணரக்கர் கள்மதின் மூன்று
மடுக்குநிலை சுமந்த வலிதடப் பொன்மலை
கடுமுரண் குடிக்கு நெடுவிற் கூட்டி
யாயிரந் தீவா யரவுநாண் கொளுவி
  மாதவ னங்கி வளிகுதை யெழுநுனை
செஞ்சரம் பேரரு ளரக்கன் மதியாகத்
தேர்வரை வையை மாகத் திருத்தச்