24கல்லாடம்[செய்யுள்1]



 
 

செய்யுள் 1

நேரிசையாசிரியப்பா

 
   
5
  அமுதமுந் யூஸவூம் பணிவரப் படைத்த
உடலக் கண்ண ணுலகுவர்ந் துண்ட
களவுடை நெடுஞ்சூர்க் கிளைகளம் விட்டொளித்த
அருணிறைந் தமைந்த கல்விய ருளமெனத்
தேக்கிய தேனுட னிறான்மதி கிடக்கும்
10
  எழுமலை பொடித்த கதிரிலை நெடுவேல்
வள்ளிதுணைக் கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த
கறங்குலா லருவிப் பரங்குன் றுடுத்த
பொன்னகர்க் கூடற் சென்னியம் பிறையோன்
பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக்
15
  கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ்க் கூறிப்
பொற்குவை தருமிக் கற்புட னுதவி
எண்ணுளங் குடிகொண் டிரும்பய னளிக்கும்
கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான்
மலர்ப்பத நீங்கா வுளப்பெருஞ் சிலம்ப
20
  கல்லாக் கயவர்க் கருநூற் கிளைமறை
சொல்லினர் தோமெனத் துணைமுலை பெருத்தன
பலவுடம் பழிக்கும் பழியி னுணவினர்
தவமெனத் தேய்ந்தது துடியெனு நுசுப்பே
கடவுட் கூறா ருளமெனக் குழலும்
25
  கொன்றைபுற வகற்றி நின்றவிருள் காட்டின
கரும்புபடிந் துண்ணுங் கழுநீர் போலக்
கறுத்துச் செவந்தன கண்ணிணை மலரே
ஈங்கிவை நிற்க சீறூர் பெருந்தமர்
இல்லிற் செறிக்குஞ் சொல்லுனுட் சின்மொழி
30
  விள்ளுந் தமியி கூறினர்
உள்ளங் கறுத்துக் கண்செவந் துருத்தே.             ( 1 )