242கல்லாடம்[செய்யுள்27]



 
 

செய்யுள் 27

நேரிசையாசிரியப்பா

 
   
5
  புயற்கார்ப் பாசடை யெண்படப் படர்ந்த
வெள்ளப் பெருநதி கொள்ளைமுகம் வைத்து
நீடநிறை பாயும் வான வாவிக்கு
ளொருசெந் தாமரை நடுமலர்ந் தென்ன
மூவடி வழக்கிற் கோரடி மண்கொண்
10
  டொருதாள் விண்ணத் திருமைபெற நீட்டிய
கருங்கடல் வண்ணன் செங்க ருங்கரத்
தோன்றா லிருமலை யன்றேந் தியதென
வுந்தியொழுக் கேந்திய வனமுலை யாட்டியும்
வரைபொரு மருமத் தொருதிற னீயு
15
  முழைவா யரக்கர் பாடுகிடந் தொத்த
நிறைகிடைப் பொற்றை வரைகிடந் திறந்தா
லெரிதழற் குஞ்சிப் பொறுவிழிப் பிறழெயிற்
றிருளுட லந்தகன் மருள்கொள வுதைத்த
மூவாத் திருப்பதத் தொருதனிப் பெருமா
20
  னெண்ணிற் பெறாத வண்டப் பெருந்திர
ளடைவீன் றளித்த பிறைநுதற் கன்னியொடு
மளவாக் கற்ப மளிவைத்து நிலைஇய
பாசடை நெடுங்காடு காணிகோ ணீர்நாய்
வானவி னிறத்த நெட்டுடல் வாளைப்
25
  பேழ்வா யொளிப்ப வேட்டுவப் பெயரளி
யிடையுழற் நுசுப்பிற் குரவைவாய்க் கடைசியர்
களைகடுந் தொழிவிடுத் துழவுசெறு மண்டப்
பண்கா லுழவர் பகடுபிடர் பூண்ட
முடப்புது நாஞ்சி லள்ளல்புக நிறுத்திச்
30
  சூடுநிலை யுயர்த்துங் கடுங்குலை யேறப்
பைங்குவளை துய்க்குஞ் செங்கட் கவரி
நாகொடு வெருண்டு கழைக்கரும் புழக்க
வமுதவாய் மொழிச்சியர் நச்சுவிழி போல
நெடுங்குழை கிழிப்பக் கடுங்கயல் பாயுந்
  தண்ணம் பழனஞ் சூழ்ந்த
கண்ணிவர் கூடற் பெருவலம் பதியே.