திருக்கோவையார் 107 ஆம் செய்யுள்
அறியாள்போன்று நினைவுகேட்டல்
அஃதாவது:
இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தோழியை மதியுடம்படுக்கும் தலைவன் தலைவிக்கு வழங்குதற்குத்
தழை கொணர்ந்து இதை ஏற்றுக்கொள்வாயாக! எனத் தோழியை வேண்டாநிற்ப; அதுகேட்ட
தோழி அத்தழையை இவன் வருந்தாதிருக்கும் பொருட்டு ஏற்றுக்கொள்வேன் எனத் தன்னுட்
கருதி ஐய! என்னுடைய தோழியர் பலர்; அவருள் யாருக்கு நீ இத்தழையை கொணர்ந்தனை
எனத் தான் அறியாதாள்போல அவன் நினைவினை வினவியது என்பதாம். அதற்குச் செய்யுள்:
விண்ணிறந் தார்நிலம்
விண்டவ
ரென்றுமிக் காரிருவர்
கண்ணிறந் தார்தில்லை யம்பலத்
தார்கழுக் குன்றினின்று
தண்ணறுந் தாதிவர் சந்தனச்
சோலைப்பந் தாடுகின்றார்
எண்ணிறந் தாரவர் யார்கண்ண
தோமன்ன நின்னருளே.
|
வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை வெறியர் கோதை யறியே னென்றது.
(இ-ள்)
விண் இறந்தார் நிலம் விண்டவர் என்று மிக்கார் இருவர் கண் இறந்தார்-தம்முடைய
முடியைக் காண்டற்கு அவாவி வானில் பறந்து கடந்த நான்மிகனும் அடியைக் காண்டற்கு அவாவி
நிலத்தை அகழ்ந்து சென திருமாலும் என்னும் தேவர்களின் மிக்க இவ்விரண்டு தேவர்களுக்கும்
கண்ணைக் கடந்து அப்பாலானவராயிருந்தும் மெய்யடியார் பொருட்டு; தில்லை அம்பலத்தார்-எளிவந்து
திருத்தில்லைச்சிற்றம்பலத்தின்கண் இன்பக்கூத்தியற்றுகின்ற சிவபெருமானுடைய; கழுக்குன்றில்-திருக்கழுக்குன்றத்தின்கண்ணே;
தண் நஏஉந்தாது இவர் சந்தனச்சோலை நின்று பந்து ஆடுகின்றார் எண் இறந்தார்-குளிர்ந்த
நறிய பூந்துகள் பரவிய சந்தனச்சொலையிடத்தே நின்று பந்தாடுகின்ற என் தோழிமார்
சாலப் பலராவர்; மன்ன-வேந்தனே; நின் அருள் அவர் யார் கண்ணதோ-நின்னுடைய அருள்
அவருள் வைத்து எத்தொழியின் பாலதோ யான் அறிகின்றிலேன்; கூறுவாயாக! என்பதாம்.
(வி-ம்.)
விண்ணிறந்தார் என்றது இறைவனுடைய திருமுடியை யான் காண்குவன் என்று அன்னமாய் விண்ணிற்பறந்த
நான்முகனை
|