|
|
செய்யுள்
28
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பற்றலர்த்
தெறுதலு முவந்தோர்ப் பரித்தலும்
வெஞ்சுடர் தண்மதி யெனப்புகழ் நிறீஇய
நெட்டிலைக் குறும்பர்க் குருதி வேலவ
வேதியன் படைக்க மாலவன் காக்கப்
பெறாததோர் திருவுருந் தான்பெரிது நிறுத்தி |
10
|
|
யமுதயில்
வாழ்க்கைத் தேவர்கோ னிகழ்ச்சிய
மதமலை யிருநான்கு பிடசுமந் தோங்கிச்
செம்பொன்மணி குயிற்றிய சிகரக் கோயிலு
ளமையாத் தண்ணளி யுமையுட னிறைந்த
வாலவா யுறைதரு மூலக் கொழுஞ்சுடர் |
15
|
|
கருவி
வான மடிக்கடி பொழியுங்
கூடஞ் சூழ்ந்த நெடுமுடிப் பொதியத்துக்
கண்ணுழை யாது காட்சிகொளத் தோற்றிய
வெறிவீச் சந்தி னிரையிடை யெறிந்து
மற்றது வேலிகொள வளைத்து வளரேன |
|
|
னெடுங்காற்
குற்றுழி யிதணுழை காத்துந்
தேவர் கோமான் சிறையரி புண்ணினுக்
காற்றாது பெருமுழை வாய்விட்டுக் கலுழ்ந்தெனக்
கமஞ்சூற் கொண்மூ முதுகுகுடி யிருந்து |