மூலமும் உரையும்249



நிலம் விண்டவர் என்றது இறைவன் திருவடியை யான் காண்குவன் என்று செருக்குற்றுப் பன்றியாகி நிலத்தை அகழ்ந்த திருமாலை. “புரங்கடந் தான்அடி காண்பான் புவிவிண்டு புக்குஅறியாது இரங்கிடு எந்தாய் என்றிரப்ப” எனவரும் திருக்கோவையும் (86) காண்க. இறந்தார் விண்டவர் என்னும் பன்மைக்கள் இகழ்ச்சிக் குறிப்பு. மிக்கார் என்றது செருக்குமிக்கோர் எனவும் ஒருபொருள் தோன்ற நின்றது. கண்ணிறத்தல்-காணப்படாதிருத்தல். விண்டவர் என்புழி விண்டென்பது பிளந்தென்பதுபோலச் செய்வதன்றொழிற்கும் செய்விப்பதென்றெழிற்கும் பொது. விண்ணிறந்தார்க்கும் நிலம் விண்டவர்க்கும் கண்ணிறந்தாராயினும் மெய்யடியார்க்கு எளிவந்து காட்சி தருபவர் என்னும் கருத்தால் தில்லையம்பலத்தார் என்றார். கழுக்குன்று-திருக்கழுக்குன்றம். சோலைநின்று எனக் கூட்டுக. எண்ணிந்றதார் பலர் என்றும் பாடம். அறிகின்றிலேன் என்பது சொல்லெச்சம். கூறுவாயாக என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு: மருட்கையைச் சார்ந்த பெருமிதம். நும்மால் கருதப்படுவாளை அறியேன் என்றால் என் குறை இன்னாள் கண்ணதென அறிவித்து இவள் முடிக்குமென நினைந்து ஆற்றுவானாம் என்பது பயன்.

 
 

செய்யுள் 28

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பற்றலர்த் தெறுதலு முவந்தோர்ப் பரித்தலும்
வெஞ்சுடர் தண்மதி யெனப்புகழ் நிறீஇய
நெட்டிலைக் குறும்பர்க் குருதி வேலவ
வேதியன் படைக்க மாலவன் காக்கப்
பெறாததோர் திருவுருந் தான்பெரிது நிறுத்தி
10
  யமுதயில் வாழ்க்கைத் தேவர்கோ னிகழ்ச்சிய
மதமலை யிருநான்கு பிடசுமந் தோங்கிச்
செம்பொன்மணி குயிற்றிய சிகரக் கோயிலு
ளமையாத் தண்ணளி யுமையுட னிறைந்த
வாலவா யுறைதரு மூலக் கொழுஞ்சுடர்
15
  கருவி வான மடிக்கடி பொழியுங்
கூடஞ் சூழ்ந்த நெடுமுடிப் பொதியத்துக்
கண்ணுழை யாது காட்சிகொளத் தோற்றிய
வெறிவீச் சந்தி னிரையிடை யெறிந்து
மற்றது வேலிகொள வளைத்து வளரேன
  னெடுங்காற் குற்றுழி யிதணுழை காத்துந்
தேவர் கோமான் சிறையரி புண்ணினுக்
காற்றாது பெருமுழை வாய்விட்டுக் கலுழ்ந்தெனக்
கமஞ்சூற் கொண்மூ முதுகுகுடி யிருந்து