|
|
செய்யுள் 31
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பொருள்செய
லருத்தியி னெண்வழி தடைந்து
நாற்றிசை நடக்கு மணங்கி னவயவத்
தலைதரு தட்டைக் கரும்புற மலைமடல்
கடற்றிரை யுகளுங் குறுங்கயன் மானுங்
கடுங்கான் றள்ளித் தடைதரு நெஞ்சங் |
10
|
|
கயிலைத்
தென்பாற் கானகந் தனித்த
தேவர்நெஞ் சுடைக்குந் தாமரை யேவின்
மணக்கோ றுரந்த குணக்கோ மதனைத்
திருக்குள முளைத்த கட்டா மரைகொடு
தென்கீழ்த் திசையோ னாக்கிய தனிமுதற் |
15
|
|
றிருமா
மதுரை யெனுந்திருப் பொற்றொடி
யென்னுயி ரடைத்த பொன்முலைச் செப்பி
னளவம ரின்பங் கருதியோ வன்றிப்
புறன்பயன் கொடுக்கும் பொருட்கோ வாழி
வளர்முலை யின்பெனின் மறித்துநோக் குமதி |
|
|
பெரும்பொரு
ளின்பெனிற் பிறிதுடை யின்றே
யோதல் வேண்டு வாழிய பெரிதே. |
(உரை)
கைகோள்: கற்பு; தலைவன் கூற்று
துறை: நெஞ்சொடுநோதல்.
(இ-ம்.)
இதற்கு, கரணத்தின் அமைந்து முடிந்த காலை (தொல். கற்பி. 5) எனவரும் நூற்பாவின்கண்,
வேற்றுநாட் டகல்வயின் விழுமத்தானும் எனவரும் விதிகொள்க.
1-5:
பொருள்................................நெஞ்சம்
(இ-ள்)
பொருள்செயல் அருத்தியின் அலைதரு கடுங்கான் தள்ளி-பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை
எனவும் ஆகலின் பொருளைப் பெரிதும் ஈட்டுதல் வேண்டும் எனவும் எனக்கு எடுத்துக்கூறி அதனை
ஈட்டும் அவாவினாலே என்னைத் துன்பம் தருதற்குக் காரணமான கடிய காட்டினிடத்தே செலுத்திப்
பின்னர்; எண்வழி தடைந்து-இங்ஙனம் எண்ணுகின்ற பொருளீட்டும் வழியிற்செல்லும் செலவினைத்
தடுத்துப்பின்னர;்
|