மூலமும் உரையும்281



திருக்கோவையார் 74 ஆம் செய்யுள்
உலகின்மேல் வைத்துரைத்தல்

     அஃதாவது: தோழிபால் குறையுறும் தலைவன் அவள் தன் குறை முடியாமை கண்டு இனி யான் மடலூர்ந்தேனும் அவளை எய்துவேன் எனத் தோழிக்குணர்த்துபவன் மடலூரிந் தன் கருத்தினை உலகின்மேல் வைத்துக் கூறுதல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:

காய்ச்சின வேலன்ன மின்னியல்
     கண்ணின் வலைகலந்து
வீசின போதுள்ள மீனிழந்
     தார்வியன் றென்புலியூர்
ஈசன சாந்து மெருக்கு
     மணிந்தோர் கிழிபிடித்துப்
பாய்சின மாவென வேறுவர்
     சீறூர்ப் பனைமடலே.

புலவே லண்ணல் புனை மடலேற் றுலகின் மேல்வைத் துய்த்து ரைத்தது.

     (இ-ள்) காய்சினவேல் அன்ன மின்இயல் கண்ணின்வலை-சுடுகின்ற வெகுளியையுடைய வேலினை ஒத்த ஒளிவீசும் கண்ணாகிய வலையை; கலந்து வீசினபொது-மகளிர் காமக் குணத்தினைக் கலந்துவிசிய காலத்தே; உள்ளம் மீன் இழந்தார்-அவ்வலையிலே அகப்படுதலாலே தம் ந்வ்ஞ்சமாகிய மீனை இழந்துவிட்ட ஆடவர்; வியன் தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து-அகன்ற தென்புலியூரின்கண் எழுந்தருளியுள்ள சிவபெருமானுடைய திருநீற்றையும் எருக்கம்பூ மாலையினையும் அணிந்துகொண்டு; ஓர் கிழிபிடித்து-அம்மகளிர் உருவம் வரையப்பட்ட ஒரு கிழியைக் கையிலே பிடித்துக்கொண்டு; பனை மடல் பாய்சின மாஎன சீறூர் ஏறுவார்-பனைமடலால் பாயவல்ல சினத்தையுடைய குதிரைபோலச் செய்து அதன்மேல் சிற்றூரின்கண் ஏறாநிற்பர் காண்; அஃதெப்பொழுதெனின் அவ்வாடவர் தம் நெஞ்சாகிய அம்மீனைப் பெறுதற்கு வேறு வழி இல்லாதவிடத்தே என்பதாம்.

     (வி-ம்.) காய்சினவேல் என்பது உடையார் பண்பினை உடைமைமேல் வைத்து ஓதப்பட்டது. கண்ணின் வலை என்புழி இன் அல்வழிவந்த சாரியை. கண்ணென் வலை என்பதூஉம் பாடம். மகளிர் என ஒருசொல் வருவியாது கண்ணையே கருத்தாவாகக் கூறினுமாம். அஃதாவது கண்ணானது வலையை வீசினபோது எனக் கூறினுமாம்