மூலமும் உரையும்293



திருக்கோவையார் 11 ஆம் செய்யுள்
நலம்புனைந்துரைத்தல்

     அஃதாவது: இயற்கைப் புணர்ச்சி யெய்திய தலைவன் இயற்கையன்பினாலும் செயற்கையன்பினாலும் அவளுடைய பெண்மை நலத்தினைப் பாராட்டிக் கூறுதல் என்பதாம். அதற்குச் செய்யுள்:

கூம்பலங் கைத்தலத் தன்பரென்
     பூடுரு கக்குனிக்கும்
பாம்பலங் காரப் பரன்றில்லை
     யம்பலம் பாடலிற்
றேம்பலஞ் சிற்றிடை யீங்கிவ
     டீங்கனி வாய்கமழும்
ஆம்பலம் பொதுள வோவளி
     காணும் மகன்பணையே.

பொங்கி ழையைப் புனைநலம் புகழ்ந் தங்கதிர் வேலோன் அயர்வு நீங்கியது.

     (இ-ள்) அளிகாள்நும் அகன்பணை-வண்டுகளே! நும்முடைய வ்சிரிந்த மருத நிலத்தின்கண்ணே; கூம்பு கைத்தலத்து அன்பர் என்பு ஊடு உருகக் குனிக்கும்-குவிக்கும் கைத்தலங்களையுடைய தன்மெய்யன்பருடைய என்புகள் உள்ளே உருகும்படி கூத்தாடாநின்ற; பாம்பு அலங்காரப் பரன்தில்லை அம்பலம் பாடலரின்-பாம்பாகிய அணிகலனையுடைய இறைவனுடைய தில்லைத் திருச்சிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடாத மடவோர் போல; தேம்பு சிறு இடை ஈங்கு இவள்-மெலியா நின்ற சிறிய இடையினையுடைய இந்நங்கையினது; தீங்கனிவாய் கமழும் ஆம்பல் போது உளவோ-இனிதாகிய கனிந்த வாய்போல நறுமணங்கமழும் ஆம்பல் மலர்கள் உள்ளனவோ உளவாயின் சொல்லுமின் என்பதாம்.

     (வி-ம்.) கூம்பலங்கைத்தலம் என்புழி அல்அம் இரண்டும் அல்வழிச்சாரியை. பாப்பலங்காரம் எனல் வேண்டியது பாம்பலங்காரம் என எதுகை நோக்கி மெலிந்து நின்றது. தில்லை அம்பலத்தைப் பாடாதார் தேம்புதல்போலத் தேம்பும் சிற்றிடை என்க. ஈங்கிவள் என்றது இவள் என்னும் ஒருசொல் மாத்திரையாய் நின்றது. போது-மலர். அளிகாள்: விளி. அளி-வண்டு. பணை-மருதநிலம். மெய்ப்பாடு-உவகை. பயன்-நயப்புணர்த்துதல்.

 
 

செய்யுள் 35

நேரிசையாசிரியப்பா

 
   
  அருடருங் கேள்வி யமையத் தேக்கப்
பற்பல வாசான் பாங்குசெல் பவர்போன்