எழுமையும்-எழுபிறப்பின்
கண்ணும். உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று
என்பவாகலின் எலாவற்றினும் சிறந்த கற்பினைப் பேணும்பொருட்டு நாணத்தை நெகிழவிடும்
தலைவி தன் உயிரினும் சிரந்த அதன் அழிவிற்காற்றாது இரங்கும் இப்பெருந்தகைமை பெரிதும்
இன்பம் தருவதொன்றாதல் உணர்க. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-உடன்போகத்துணிதல்.
|
|
செய்யுள்
36
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
மைகுழைத்
தன்ன தொள்ளியஞ் செறுவிற்
கூர்வாய்ப் பறைதபு பெருங்கிழ நாரை
வஞ்சனை தூங்கி யார லுண்ணு
நீங்காப் பழனப் பெருநகர்க் கூடற்
கரமான் றரிந்த பெருமா னிறைவன் |
10
|
|
பொன்பொழித்
த்வெடுத்த லின்புறு திருவடி
யுளம்விழுங் காத களவினர் போலவென்
னுயிரொடும் வளர்ந்த பெருநாண் டறியினை
வெற்பன் காதற் காலுலை வேலையின்
வலியுடைக் கற்பி னெடுவளி சுழற்றிக் |
15
|
|
கட்புலங்
காணாது காட்டைகெட வுந்தலி
னென்போ லிந்நிலை நின்றவர் படைக்கும்
பேறாங் கொழிக பெருநாண் கற்பின
ரெற்பே றுடைய ராயிற்
கற்பிற் றோன்றாக் கடனா குகவே. |
(உரை)
கைகோள்: களவு. தலைவிகூற்று
துறை: நாணிழந்து
வருந்தல்.
(இ-ம்.)
இதற்கு உயிரினும் சிறந்தன்று......................தோன்றுமன் பொருளே (தொல்.
கள. 22) எனவரும் நூற்பாவின்கண் தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் எனவரும்
விதிகொள்க.
1-4:
மைகுழைத்..............................கூடல்
(இ-ள்)
மைகுழைத்து அன்ன தொள்ளியம் செறுவில்-மையினைக் குழைத்தாற்போன்ற கரிய சேற்றினையுடைய
அழகிய கழனியின்கண்ணே; பரைதபு பெருகிழ நாரை-பறக்கும் ஆற்
|