|
|
செய்யுள்
37
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வடமீன்
கற்பினம் பீடுகெழு மடந்தை
பெருங்கடன் முகந்து வயிறுநிறை நெடுங்கார்
விண்டிருந்து முழங்கி வீழா தாகக்
கருவொடு வாடும் பைங்கூழ் போலக்
கற்புநாண் மூடிப் பழங்கண் கொள்ள |
10
|
|
வுயர்மர
முளைத்த வூரி போல
வோருடல் செய்து மறுமனங் காட்டு
மாணிழை மகளிர் வயினல் குதலாற்
கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றிருதரு குட்டி யாயபன் னிரண்டினைச் |
15
|
|
செங்கோன்
முளையிட் டருணீர் தேக்கிக்
கொலைகள வென்னும் படர்களை கட்டுத்
திக்குப்பட ராணை வேலி கோலித்
தருமப் பெரும்பயி ருலகுபெற விளக்கு
நாற்படை வன்னிய ராக்கிய பெருமான் |
20
|
|
முள்ளுடைப்
பேழ்வாய்ச் செங்கண் வராலினம்
வளைவாய்த் தூண்டிற் கருங்கயிறு பரிந்து
குவளைப் பாசடை முண்டக முழக்கி
நெடுங்கால் பாய்ந்து வடுத்த வொண்டொழிற்
சுருங்கைவழி யடைக்கும் பெருங்கழிப் பழனக் |
|
|
கூடற்
கிறைவ னிருதாள் விடுத்த
பொய்யினர் செய்யும் புலம் போலப்
பேரா வாய்மை யூரான்
றாரொடு மயங்கிப் பெருமையு மிலனே. |