302கல்லாடம்[செய்யுள்37]



 
 

செய்யுள் 37

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வடமீன் கற்பினம் பீடுகெழு மடந்தை
பெருங்கடன் முகந்து வயிறுநிறை நெடுங்கார்
விண்டிருந்து முழங்கி வீழா தாகக்
கருவொடு வாடும் பைங்கூழ் போலக்
கற்புநாண் மூடிப் பழங்கண் கொள்ள
10
  வுயர்மர முளைத்த வூரி போல
வோருடல் செய்து மறுமனங் காட்டு
மாணிழை மகளிர் வயினல் குதலாற்
கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றிருதரு குட்டி யாயபன் னிரண்டினைச்
15
  செங்கோன் முளையிட் டருணீர் தேக்கிக்
கொலைகள வென்னும் படர்களை கட்டுத்
திக்குப்பட ராணை வேலி கோலித்
தருமப் பெரும்பயி ருலகுபெற விளக்கு
நாற்படை வன்னிய ராக்கிய பெருமான்
20
  முள்ளுடைப் பேழ்வாய்ச் செங்கண் வராலினம்
வளைவாய்த் தூண்டிற் கருங்கயிறு பரிந்து
குவளைப் பாசடை முண்டக முழக்கி
நெடுங்கால் பாய்ந்து வடுத்த வொண்டொழிற்
சுருங்கைவழி யடைக்கும் பெருங்கழிப் பழனக்
  கூடற் கிறைவ னிருதாள் விடுத்த
பொய்யினர் செய்யும் புலம் போலப்
பேரா வாய்மை யூரான்
றாரொடு மயங்கிப் பெருமையு மிலனே.

(உரை)
கைகோள்: கற்பு. தோழிகூற்று

துறை: தோழியியற்பழித்தல்.

     (இ-ம்.) இதனை, “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல்-கற்பு. 9) எனவரும் நூற்பாவின்கண் ‘வகைப்படவந்த கிளவி; என்பதன்கண் அமைத்துக்கொள்க.