308கல்லாடம்[செய்யுள்38]



“காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
 மாலை மலருமிந் நோய்”
(குறள். 1227)

என்பதுபற்றி இனி இந் நோய் என்னைப் பெரிதும் வருத்தும் என்று அஞ்சுவால் பகலோன் கரந்தனன் என்றாள். காப்பவர் என்றது தலைவனை. அகல் இருங்கழி, ஓங்கு இருங்கழி எனத் தனித்தனி கூட்டுக. ஓங்குதல்-ஓதத்தால் நீர் உயர்தல். ஓதம்-கடற்பெருக்கு. கொழுமீன் என்பது ஒரு சாதிமீனுமாம். மெய்ப்பாடு-அழுகை. பயன்-அயவுயிர்த்தல்.

 
 

செய்யுள் 38

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கோடிய கோலினன் செருமுகம் போலக்
கனைகதிர் திருகிக் கல்சேர்ந்து முறைபுகப்
பதினெண் கிளவி யூர்துஞ் சியபோற்
புட்குலம் பொய்கை வாய்தழக் கொள்ள
வேள்சரத் துடைகுநர் கோல நோக்கி
10
  யிருண்மகள் கொண்ட குறுநகை போல
முல்லையு மௌவலு முருகுயிர்த் தவிழத்
தணந்தோ ருளத்திற் காமத் தீப்புக
மணந்தோர் நெஞ்சத் தமுத நீர்விட
வன்றில்புற் சேக்கை புக்கலகு பெடையணைய
15
  வந்தண ரருமறை யருங்கிடை யடங்க
முதிர்கனி மூல முனிக்கண மறுப்பக்
கவலையும் பூவுந் தோண்முடி கமழ
விரிவலை நுளையர் நெய்த லேந்தித்
துத்தங் கைக்கிளை யளவையின் விளைப்ப
20
  நீரர மகளிர் செவ்வாய் காட்டிப்
பசுந்தாட் சேக்கொ ளாம்பன் மலரத்
தோளு மிசையுங் கூறிடுங் கலையு
மருட்டிரு வெழுத்தும் பொருட்டிரு மறையும்
விரும்பிய குணமு மருந்திரு வுருவு
25
  முதலெண் கிளவியும்விதமுட னிரையே
யெட்டு மேழுஞ் சொற்றன வாறு
மைந்து நான்கு மணிதரு மூன்றுந்
துஞ்சலி லிரண்டுஞ் சொல்லரு மொன்று
மாருயிர் வாழ வருள்வர நிறுத்திய