32கல்லாடம்[செய்யுள்2]



 
 
நேரிசையாசிரியப்பா
 
   
5
  பூமணியானை பொன்னென வெடுத்துத்
திங்களும் புயலும் பருதியுஞ் சுமந்த
மலைவருங் காட்சிக் குரிய வாகலி
னிறையுடைக் கல்வி பெறுமதி மாந்த
ரீன்றசெங் கவியெனத் தோன்றிநனி பரந்து
10
  பாரிடை யின்ப நீளிடைப் பயக்கும்
பெருநீர் வையை வளைநீர்க் கூட
லுடலுயி ரென்ன வுரைதரு நாயகன்
கடுக்கைமலர் மற்றி வேப்பலர் சுடி
ஐவாய்க் காப்புவிட் டணிபூ ணணிந்து
15
  விரிசாடை மறைத்து மணிமுடி கவித்து
விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி யெடுத்து
வழுதி யாகி முழுதுல களிக்கும்
பேரரு ணாயகன் சீரருள் போல
மணத்துடன் விரித்த கைதையங் கானத்
20
  தோடா வென்றிப் பொலம்பூட் குரிசில்
சின்னங் கிடந்த கொடிஞ்சி மாத்தோர்
நொச்சிப் பூவுதிர் நள்ளிரு ணடுநாள்
விண்ணஞ் சுமந்து தோற்றஞ் செய்தெனத்
தன்கண் போலு மென்க ணோக்கிக்
25
  கள்வரைக் காணு முள்ளம் போலச்
செம்ம்னந் திருகி யுள்ளந் துடித்துப்
புறன்வழங் காது நெஞ்சொடு கொதித்தனண்
மாறாக் கற்பி னன்னை
கூறா மதியத் திருநுதற் கொடியே.                    (2)

(உரை)
கைகோள், களவு, தோழிகூற்று

துறை: தாயறிவு கூறல்
(இ-ம்.) இதுவுமது

1 - 8: பூமணி..........................................நாயகன்

     (இ-ள்) பூமணியானை பொன் என எடுத்து-மலர்களையும் மணிகளையும் யானைகளையும் பொன்னையும் சுமந்துகொண்டு;