|
|
செய்யுள்
43
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கவைத்துகிர்
வடவையிற் றிரட்சிகை பரப்பி
யரைபெறப் பிணித்த தற்குளி மாக்க
ளுள்ளந் தீக்கு முவர்க்கட லுடுத்த
நாவல்ந் தண்பொழி லின்புடன் றுயில
வுலகற விழுங்கிய நள்ளென் கங்கு |
10
|
|
றுயிலாக்
கேளுட னுயிரிரை தேரு
நெட்டுடற் பேழ்வாய்க் கழுது முறங்கப்
பிள்ளையும் பெடையும் பறைவரத் தழீஇச்
சுற்றமுஞ் ழுழ்ந்து குருகுகண் படுப்பக்
கீழரும் பணைத்த முள்ளரை முளரி |
15
|
|
யிதழ்க்கத
வடைத்து மலர்க்கண் டுயில
விரிசினை பொதுளிய பாசிலை பொடுக்கிப்
பூவோடும் வண்டொடும் பொங்கரு முறங்கப்
பான்முகக் களவின் குறுங்காய்ப் பச்சிணர்
புட்காற் பாட்டினர்க் குறையுள் கொடுத்த |
20
|
|
மயிர்குறை
கருவித் துணைக்குழை யலைப்ப
வரிந்தவிந் தனச்சுமை மதியர விதழி
யகன்றுகட் டவிழ்ந்த சேகரத் திருத்தி
வீதியுங் கவலையு மிகவளம் புகன்று
பொழுதுகண் மறைந்த தீவாய்ச் செக்கர் |
|
|
தணந்தோ
ருள்ளத் துள்ளுறப் புகுந்தபின்
காருடல் காட்டிக் கண்டகண் புதைய |