346கல்லாடம்[செய்யுள்43]



     (வி-ம்.) மூலல் என்பது ஒரு திருப்பதி. பாலைக்கு நிலமின்மையின் நானிலம் எனப்பட்டது. நயந்த சேவலைப் பொருந்திய களிப்பால் இவ்வன்னம் சென்றுரையாமையல்லது அவர் எம்மைக் காவாது விடார் என்னுங் கருத்தால் எங்காவல் தழீஇயவர் என்றாள். உற்றார் துயர்கண்டு இரங்கும் நற்பண்பின்மையின் அளிய அன்னம் என்றாள். பெண் மனத்தைப் பெண்மனமே அறியும் எனப்துபற்றிச் சேவலைக் குறைகூறாமல் பெடையன்னத்தையே குறைகூறினள். செல்வன்- அடியார்க்குச் செல்வமாக உள்ளவன். முந்நீர் - கடல். நாவல் - நாவலம்பொழில் என்னும் பெயர். நானிலம் துஞ்சுதலேயன்றித் தானுந்துஞ்சும் எனல் வேண்டிய எச்சவும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. துயிலாச் செயிர் - துயிலாமைக்குக் காரணமான வருத்தம். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

 
 

செய்யுள் 43

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கவைத்துகிர் வடவையிற் றிரட்சிகை பரப்பி
யரைபெறப் பிணித்த தற்குளி மாக்க
ளுள்ளந் தீக்கு முவர்க்கட லுடுத்த
நாவல்ந் தண்பொழி லின்புடன் றுயில
வுலகற விழுங்கிய நள்ளென் கங்கு
10
  றுயிலாக் கேளுட னுயிரிரை தேரு
நெட்டுடற் பேழ்வாய்க் கழுது முறங்கப்
பிள்ளையும் பெடையும் பறைவரத் தழீஇச்
சுற்றமுஞ் ழுழ்ந்து குருகுகண் படுப்பக்
கீழரும் பணைத்த முள்ளரை முளரி
15
  யிதழ்க்கத வடைத்து மலர்க்கண் டுயில
விரிசினை பொதுளிய பாசிலை பொடுக்கிப்
பூவோடும் வண்டொடும் பொங்கரு முறங்கப்
பான்முகக் களவின் குறுங்காய்ப் பச்சிணர்
புட்காற் பாட்டினர்க் குறையுள் கொடுத்த
20
  மயிர்குறை கருவித் துணைக்குழை யலைப்ப
வரிந்தவிந் தனச்சுமை மதியர விதழி
யகன்றுகட் டவிழ்ந்த சேகரத் திருத்தி
வீதியுங் கவலையு மிகவளம் புகன்று
பொழுதுகண் மறைந்த தீவாய்ச் செக்கர்
  தணந்தோ ருள்ளத் துள்ளுறப் புகுந்தபின்
காருடல் காட்டிக் கண்டகண் புதைய