மூலமும் உரையும்367



எம்பெருமான் தங்கியிருக்கும் அவ்விடத்தே என்பதுபட நின்றது, தமியர் - துணைவரைப் பிரிந்து தனித்துறைவோர். அல்கும் - தங்கும், மெய்ப்பாடு - அழுகை, பயன் - அயாவுயிர்த்தல்.

 
 

செய்யுள் 46

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பசிமயல் பிணித்த பிள்ளைவண் டாற்ற
வாசையிற் செறிந்த பொங்கர்க் குலத்தா
யருப்பு முலைக்கண் டிறந்துமிழ் மதுப்பால்
சினைமலர்த் துணைக்கரத் தன்புட னணைத்துத்
தேக்கிட வருத்தி யலர்மலர்த் தொட்டில்
10
  காப்புறத் துயிற்றுங் கடிநகர்க் கூட
லருளுட னிறைந்த கருவுயிர் நாயகன்
குரவரும் புடுத்த வாலெயிற் றழல்விழிப்
பகுவாய்ப் பாம்பு முடங்க லாக
வாலவாய் பொதிந்த மதிமுடித் தனிமுதல்
15
  சேக்கொண் முளரி யலர்த்திய திருவடி
கண்பரு காத களவின ருளம்போற்
காருடன் மிடைந்த குளிறுகுரற் கணமுகி
லெம்முயி ரன்றி யிடைகண் டோர்க்கு
நெஞ்சறை பெருந்துய ரோவா துடற்றக்
  கவையா நெஞ்சமொடு பொருவினைச் சென்றோர்
கண்ணினுங் கவருங் கொல்லோ
வுண்ணிறைந் திருந்த வாழிய மனனே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று.

துறை: கூதிர்கண்டு கவறல்.

     (இ - ம்.) இதனை, "அவனறி வாற்ற வறியு மாகலின்" (தொல், கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண் ‘ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்’ என்பதன்கண் அமைத்து’கொள்க.

1 - 7: பசி . . . . . . . . . . நாயகன்

     (இ-ள்) பசிமயல் பிணித்த பிள்ளைவண்டு அரற்ற - பசியாகிய மயக்கத்தாற் கட்டுண்ட தன் பிள்ளைகளாகிய வண்டுகள் ஆரவாரித்தலாலே; ஆசையின் செறிந்த பொங்கர் குலத்தாய்-