என்க. கார் வரவே
எம்பெருமான் தேரும் வரும் என என்வரவினை எதிர்பார்த்து உயிர்தாங்கி இருப்பவள் என்னையன்றி
நீ முற்படின் எற்காணாது உயிர்விடுதலுங் கூடும் என்பான், என்னின் முன்னேல் என்றான்.
முதுவோர் - முதுபெண்டிர். தனித்துறையும் மகளிர்க்கு ஆறுதல் செய்தற்கு முதுபெண்டிர் இல்லுறை
கடவுளுக்குப் பூசனை செய்தல் மரவு. வாள் - ஒளி. செல்லல் - துன்பம். விரை - மணம்.
மலரும் நெல்லுந் தூவி வழிபடுதல் மரபு. இதனை,
"யாழிசை யினவண்
டார்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க்கை கொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப"
(பத்துப் பாட்டு, முல்லைப். 8-11) |
எனவரும் முல்லைப் பாட்டானும் உணர்க. இனி இதனால் விரைமலர் தூய் நெற்படு வான்பலி
செய்தயராநிற்கம் என்பதற்குப் பலி கொடுத்து விரிச்சியயராநிற்கும் எனினும் அமைதலுணர்க.
மெய்ப் பாடு - அச்சம். பயன் - பாகன் தேரை விரைந்தூர்தல்.
|
|
செய்யுள்
47
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கருங்குழற்
செவ்வாய்ச் சிற்றிடை மடந்தைக்
குளத்துய ரீந்து கண்டுயில் வாங்கிய
வானா வின்ன லழிபடக் காண்பான்
விரிபொரி சிந்தி மணமலர் பரப்பித்
தெய்வக் குலப்புகை விண்ணோடும் விம்ம |
10
|
|
விருநாற்
றிசையு முண்பலி தூவி
நானூன் மாக்க ணணிக்குறி சொற்றுப்
பக்கஞ் சூழ்ந்த நெடுநகர் முன்றிற்
கோடகழ்ந் தெடுத்த மறிநீர்க் காலும்
வெண்கார் பெய்யு நாள்குறித் துழுநருஞ் |
15
|
|
சூனிறைந்
துளையுஞ் சுரிவளைச் சாற்று
மினக்கய லுண்ணுங் களிக்குரு கினமும்
வரைப்பறை யரிந்த வாசவற் றொழுது
நிரைநிரை விளம்பி வழிமுடி நடுநரு
நாறுகழி துற்ற சகடீர்க் குநருந் |
|
|
தாமரை
பாடு மறுகாற் கிளியு
முறைத்தெறி கம்பலை யும்பரைத் தாவி
முடித்தலை முடிர்ப்ப வடிக்கடி கொடுக்கு |
|