மூலமும் உரையும்377



திருக்கோவையார் 115 ஆம் செய்யுள்
தழைவிருப்புரைத்தல்

     அஃதாவது: தலைவியைத் தழையேற்பித்துத் தோழி தலைவன்பாற் சென்று ஐயா! நீதந்த தழையை யான் எம்பெருமாட்டிபாற் சென்று கொடுத்தேன். அதனை ஏற்றுக்கொண்டு அவள் செய்ததனைச் சொல்லிற் பெருகும் என்று தலைவியினது விருப்பத்தை அவனுக்குக் கூறாநிற்றல் என்பதாம். அதற்குச் செய்யுள்:-

பாசத் தளையறுத் தாண்டுகொண்
     டோன்றில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்ம னீதந்
     தனசென் றியான்கொடுத்தேன்
பேசிற் பெருகுஞ் சுருங்கு
     மருங்குல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிலளன்றிச் செய்யா
     தனவில்லை பூந்தழையே.

விருப்பவள் தோழி பொருப்பற் குரைத்தது.

     (இ-ள்) செம்மல் நீதந்தன - பெருமானே நின்னால் வழங்கப்பட்ட தழைகள்; பாசத்தளை அறுத்து - அன்பர்களுடைய பாசமாகிய தளையினை அறத்து; ஆண்டு கொண்டோன் தில்லை அம்பலம் சூழ் தேசத்தன - தனக்கே தொண்டு செய்யும்படி அடிமை கொண்டவனாகிய இறைவன் எழுந்தருளியுள்ள தில்லைத் திருச்சிற்றம்பலத்தைச் சூழ்ந்துள்ள பொழிலின்கண் உள்ளவை; நீ தந்தன - அவற்றிற்கு இயல்பாக உள்ள அச்சிறப்பே யல்லாமலும் நின்னாலும் வழங்கப்பட்டன; சென்று யான்கொடுத்தேன்- அவற்றை யான் சென்று எம்பெருமாட்டியின்பாற் கொடுத்தேன் - அவற்றை யான் சென்று எம்பெருமாட்டியின்பாற் கொடுத்தேன், அங்ஙனம் கொடுத்தவுடன்; பேசில் பெருகும் - அங்கு நிகழ்ந்தனவற்றை யான் சொல்லுவேனாயின் மிகவும் விரியும்; சுருங்கு மருங்குல் - நுணுகிய இடையினையுடைய எம்பெருமாட்டி; பூந்தழை-மலரோடு வடிய அத்தழையை; அரைத்துப் பூசிற்றிலள் - சாந்தாக அரைத்துத் தன் மேனி யெங்கும் பூசிக் கொண்மாள் இல்லை அதுவே குறை; அன்றிப் பெயர்ந்து செய்யாதன இல்லை - அதுவே யன்றி அவள் அத்தழையினை மீண்டும் செய்யாத செயல்கள் இல்லை என்பதாம்.

     (வி-ம்.) பாசம் - பற்று. தளை - கட்டு. அடியாரின் பாசத்தளை அறுத்து ஆண்டு கொண்டோன் என்க. தேசம் - இடம்; ஆகுபெயராய்க் கொழிலைக் குறித்து நின்றது. நீ தந்த தழை அம்பலம் சூழ்ந்த